செய்திகள் :

நண்பர்களால் நடந்த பாலியல் வன்கொடுமை, மைனர் பெண்ணுக்கு நடந்த கொடூரம்; தோழி படுகொலை

post image

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண் ஒருவர் தன் நண்பர்கள் சந்தீப் மற்றும் அமித் ஆகியோருடன் இரவில் காரில் வெளியில் சென்றார். அவர்களுடன் 19 வயது பெண் ஒருவரும் இருந்தார். வழியில் காசியாபாத்தில் கெளரவ் குமார் (23) என்பவரையும் காரில் ஏற்றிக்கொண்டனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கார் மீரட் அருகில் சென்ற போது 3 ஆண்களும் 19 வயது பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்க, அப்பெண் அவர்களைத் திட்டியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட தகராறில் அப்பெண்ணை 3 ஆண்களும் சேர்ந்து ஓடும் காரிலிருந்து வெளியில் தள்ளிவிட்டனர். அந்நேரம் அந்த வழியாக வந்த மற்றொரு கார் அப்பெண் மீது மோதியதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து காரில் இருந்த 17 வயது மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அதிகாலை நேரத்தில் அப்பெண் அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்று இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்தனர். இதில் கெளரவ் மற்றும் சந்தீப் ஆகியோரை பிடிக்கச் சென்றபோது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இரண்டு பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் போலீஸார் சரியாக கண்காணிக்க தவறியதால்தான் இது போன்ற குற்றங்கள் நடப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

திருச்சி: கடன் பிரச்னை? 2 குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து தம்பதி; என்ன நடந்தது?

திருச்சி, மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு விக்டோரியா (வயது: 35) என்ற மனைவியும் ஆராதனா (வயது: 9), ஆலியா (... மேலும் பார்க்க

ராஜபாளையம்: தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தள்ளி கொலை - காப்பக இளைஞரிடம் போலீஸ் விசாரணை!

ராஜபாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை அதே காப்பகத்தை சேர்ந்த இளைஞர் கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸிடம் விசாரித்தோம்... மேலும் பார்க்க

தாய், தந்தை உட்பட உறவினர்கள் 4 பேரைக் கோடரியால் கொன்ற வழக்கு; கேரள இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் நந்தன்கோடு க்ளப்ஹவுஸ் அருகே வசித்து வந்தவர் ராஜாதங்கம். இவர் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துவந்தார். அவரது மனைவி... மேலும் பார்க்க

நாகை சிறுமி மர்மச் சாவு? ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் போராட்டம்; ஜன்னலில் எட்டிப் பார்த்த கலெக்டர்

கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் இளைஞர் ஒருவரைக் காதல் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.இந்த நிலையில் இருவரும் ரயில் மூலம் வேளாங்கண்ணிக்குச் சென்றுள்ளனர். இதில் வேளாங... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் நகை திருட்டு; சிசிடிவி-யால் சிக்கிய பெண்!

சென்னை சேத்துப்பட்டு, மங்களபுரம் பகுதியில் குடியிருந்து வருபவர் சுகந்தி. இவரின் அம்மா ஷீலா. இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கி... மேலும் பார்க்க

Punjab: விஷ சாராயம் குடித்து 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் உள்ள பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் போன்ற கிராமங்களில் விஷச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க