செய்திகள் :

நண்பர்களால் நடந்த பாலியல் வன்கொடுமை, மைனர் பெண்ணுக்கு நடந்த கொடூரம்; தோழி படுகொலை

post image

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண் ஒருவர் தன் நண்பர்கள் சந்தீப் மற்றும் அமித் ஆகியோருடன் இரவில் காரில் வெளியில் சென்றார். அவர்களுடன் 19 வயது பெண் ஒருவரும் இருந்தார். வழியில் காசியாபாத்தில் கெளரவ் குமார் (23) என்பவரையும் காரில் ஏற்றிக்கொண்டனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கார் மீரட் அருகில் சென்ற போது 3 ஆண்களும் 19 வயது பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்க, அப்பெண் அவர்களைத் திட்டியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட தகராறில் அப்பெண்ணை 3 ஆண்களும் சேர்ந்து ஓடும் காரிலிருந்து வெளியில் தள்ளிவிட்டனர். அந்நேரம் அந்த வழியாக வந்த மற்றொரு கார் அப்பெண் மீது மோதியதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து காரில் இருந்த 17 வயது மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அதிகாலை நேரத்தில் அப்பெண் அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்று இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்தனர். இதில் கெளரவ் மற்றும் சந்தீப் ஆகியோரை பிடிக்கச் சென்றபோது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இரண்டு பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் போலீஸார் சரியாக கண்காணிக்க தவறியதால்தான் இது போன்ற குற்றங்கள் நடப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; பள்ளி மாணவியுடன் லாட்ஜில் தங்கிய இளைஞர் கைதான பின்னணி!

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் தாத்தா, பாட்டியுடன் வசிக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி, திடீரென மாயமனார். அவரைக் கண்டுபிடித்து தரும்படி மாணவி தரப்பில் ஆவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க

`பேன்ட் அளவு சரியில்லை' - டெய்லரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற இளைஞர்... குமரி `பகீர்'

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, திட்டுவிளை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(65). இவர் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் பெண்களுக்கான தையலகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம... மேலும் பார்க்க

போதையில் தகராறு; அண்ணனை கொன்ற தம்பி போலீஸில் சரண் - மதுவால் நடந்த விபரீதம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி அரசமர தெருவைச் சேர்ந்த ராஜா இவரது மகன்கள் அஜித்குமார் (27) டிப்ளமோ படித்துள்ளார். ராம்குமார் (25) டூ விலர் மெக்கானிக். ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

படித்தது பிளஸ் 2; 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை -திருப்பரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்!

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் ச... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? அதிர்ச்சி தகவல்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ‘யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் அதன் உரிமையாள... மேலும் பார்க்க

'உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்' - எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம்

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு காளப்பட்டி தபால் நிலையத்தில் 15.5.2025 முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்று... மேலும் பார்க்க