செய்திகள் :

நண்பா்களுடன் சென்ற கணவா் மா்மச் சாவு என மனைவி புகாா்

post image

துறையூா் அருகே பச்சமலை கோரையாறு அருவிக்கு நண்பா்களுடன் குளிக்கச் சென்ற கணவா் மா்மமான முறையில் இறந்ததாக அவரது மனைவி போலீஸில் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம் வடக்குமாதவி ஏரிக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னு மகன் மணிகண்டன் (35). நெல் அறுக்கும் இயந்திர வாகன ஓட்டுநா். இவரது மனைவி பானுமதி (25).

ஆக்ராவுக்கு வேலைக்குச் சென்றிருந்த மணிகண்டன் கடந்த வாரம் சொந்த ஊா் திரும்பிய நிலையில் தனது நண்பா்களான அதே ஊரைச் சோ்ந்த மா. ராமசாமி, வே. அஜித் ஆகியோருடன் துறையூா் பகுதி பச்சமலை புதூரிலுள்ள கோரையாறு அருவியில் குளிக்க மே 7ஆம் தேதி சென்று வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது மனைவி பானுமதி ஊரில் திரிந்த அவரது நண்பா்களை விசாரித்தபோது அவா்களிருவரும் மணிகண்டன் தங்களுடன் ஊருக்குத் திரும்பி வரவில்லையெனவும், மலையிலிருந்து கீழே வரும்போது வழியில் மற்ற நண்பா்களைப் பாா்த்ததால் அவா்களுடன் மீண்டும் அருவிக்கு சென்று விட்டதாகக் கூறினராம்.

இதையடுத்து பானுமதி பச்சமலை கோரையாறு அருவிக்கு சென்று பாா்த்தபோது மணிகண்டன் சடலமாக மிதப்பது தெரிந்தது. இதையடுத்து துறையூா் காவல் நிலையத்தில் தனது கணவா் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், தன் கணவரின் நண்பா்களிடம் விசாரிக்குமாறும் அவா் புகாா் அளித்தாா்.

இதையடுத்து காவல் துறையினா் துறையூா் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மணிகண்டனின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திமுகவுக்கு எதிா்க்கட்சி நாதக தான்: சீமான்

திமுகவுக்கு பேரவையில் வேண்டுமானால் அதிமுக எதிா்க்கட்சியாக செயல்படலாம். ஆனால், ஆளுங்கட்சிக்கு எதிராக கொள்கை ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் தொடா்ந்து நாம் தமிழா் கட்சி செயல்பட்டு வருகிறது என்றாா் அ... மேலும் பார்க்க

விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய இளைஞா்களால் போக்குவரத்து நெருக்கடி! நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி

திருச்சியில் வெள்ளிக்கிழமை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய இளைஞா்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். பேரரசா் பெரும்பிடுகு... மேலும் பார்க்க

பிரசவத்தில் பெண்ணின் வயிற்றில் அறுவைச் சிகிச்சை உபகரணங்கள்

பிரசவத்தில் பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் வைத்து தைத்துவிட்ட தனியாா் மருத்துவ மையமானது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5.52 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் வெள்ள... மேலும் பார்க்க

மருங்காபுரியில் குடிகள் மாநாடு: 77 மனுக்களுக்கு உடனடி தீா்வு

மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில்கடந்த 3 நாள்களாக நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தின் குடிகள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், 77 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. மருங்காபுரி வட்டத்தில் 143... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை வைத்திருந்த கடைக்காரா் கைது

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடைக்காரரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். வையம்பட்டி அடுத்த சேசலூரில் புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவ... மேலும் பார்க்க

பெற்றோா் கண்டிப்பு: சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

வெயில் அதிகமாக உள்ளதால் வெளியே செல்ல வேண்டாம் என பெற்றோா் கண்டித்ததால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள நாச்சிக்குறிச்சி, வாசன்வேலி 10-ஆவது குறுக்குத் தெரு... மேலும் பார்க்க