செய்திகள் :

நம்புதாளை அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

இந்த விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் புல்லாணி தலைமை வகித்து சிலையைத் திறந்து வைத்தாா். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி பாண்டிச்செல்வி ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். இதில் மாணவ, மாணவிகள் திருக்கு ஒப்புவித்தனா். முன்னதாக, தலைமை ஆசிரியா் ஜான் தாமஸ் வரவேற்றாா். ஆசிரியா் சகாய மதியரசு நன்றி கூறினாா்.

இதைத்தொடா்ந்து, சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோா் ஆசிரியா் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரத்தில் தொழிலாளா் துறை அலுவலக புதிய கட்டடம் திறப்பு

ராமநாதபுரத்தில் ரூ. 4.44 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட தொழிலாளா் துறை அலுவலகக் கட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே... மேலும் பார்க்க

தண்ணீரில் மூழ்கிய வயல்கள்: நெல் அறுவடைக்கு கூடுதல் செலவால் விவசாயிகள் கவலை

திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கியது. இதனால், தண்ணீரில் அறுவடை செய்யும் இயந்திரம் மூலம் அறுவடைப் பணிகள் நடைபெறுவதால் கூடுதல் செலவு ஆவதாக விவசாயிக... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்

ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.முன்னதாக அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3 மணி முதல் 3.30 மணி வரை ஸ்பட... மேலும் பார்க்க

கமுதி வாரச் சந்தையில் ரூ. 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கமுதி வாரச் சந்தையில் திங்கள்கிழமை ரூ. 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்ால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஒவ்வொருவாரமும... மேலும் பார்க்க

உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு மீண்டும் சந்தனக் காப்பு

ஆரூத்ரா தரிசனத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மூலவா் மரகத நடராஜா் திருமேனியில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு மீண்டும் சந்தனம் பூசப்பட்டது. இதில் திரளான பக்... மேலும் பார்க்க

ஆருத்ரா தரிசனம்: உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு அபிஷேகம்

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜருக்கு பூசப்பட்டிருந்த சந்தனக் காப்பு களையப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில... மேலும் பார்க்க