செய்திகள் :

"நாங்கள் இந்தியாவைப் போல் இல்லை; எரிபொருள் வளத்தில் எங்களின் நிலைமை மோசம்" - பாக். அமைச்சர் ஆதங்கம்

post image

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் பாகிஸ்தான் கடும் எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

இதனால் பாகிஸ்​தானில் பெட்​ரோல், டீசல் உள்​ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ளது.

இந்​நிலை​யில் பாகிஸ்​தானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பெர்​வேஸ் மாலிக் பாகிஸ்தானிடம் ஒரு நாள் கூட அவசரக் காலத் தேவைகளுக்கான கையிருப்பு இல்லை என்றும் இந்தியா நினைத்தால் ஒரே கையெழுத்தில் இந்தியாவின் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்றும் நேர்காணல் ஒன்றில் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

எரிபொருள்
எரிபொருள்

எரிபொருள் தட்டுபாடு குறித்து பேசியிருக்கும் அவர், "எரிபொருள் வளத்​தில் பாகிஸ்​தான் நிலைமை மோச​மாகவே இருக்​கிறது. பாகிஸ்​தானிடம் தற்​போது அவசர கால தேவைக்​கான எரிபொருள் இருப்பு ஒரு நாள் கூட கிடை​யாது என்​பதே உண்​மை.

எங்​களிடம் இருப்​பது வணிக ரீதி​யான இருப்பு மட்​டுமே. கச்சா எண்​ணெய் 5 முதல் 7 நாட்​களுக்கு மட்​டுமே வரும். எண்​ணெய் நிறு​வனங்​களிடம் உள்ள சுத்​தி​கரிக்​கப்​பட்ட எரிபொருள் அதி​கபட்​சம் 20 முதல் 21 நாட்​களுக்கு மட்​டுமே இருக்​கும். நாங்​கள் இந்தியாவைப் போன்​றவர்​கள் அல்ல.

இந்​தி​யாவோ 70 நாட்​களுக்​குத் தேவை​யான எரிபொருளைச் சேமித்து வைத்துள்ளது. அங்கு ஒரு நெருக்​கடி ஏற்​பட்​டால், ஒரு கையெழுத்​தில் அந்த இருப்பை வெளி​யிட்டு அவர்​களால் நிலை​மை​யைச் சீர் செய்ய முடி​யும்.

நீண்ட காலத்​துக்கு எரிபொருள் தேவையைச் சமாளிக்க இயலும். ஆனால், பாகிஸ்​தான் எளி​தில் நிலைகுலையும் நிலையில் உள்ளது. புதிய சேமிப்புக் கிடங்குகளை உருவாக்க அதிக நிதி தேவைப்படுவதால், தற்போதைய பொருளாதாரச் சூழலில் பாகிஸ்தானால் அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை.

இந்தியா
இந்தியா

இந்திய அரசு தனது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்காக நிலத்தடியில் மிகப்பெரிய சேமிப்புக் கிடங்குகளை அமைத்துள்ளது. அவசர காலங்களில் அல்லது போர்ச் சூழலில் இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், பாகிஸ்தானிடம் அத்தகைய பிரத்யேக அரசு சேமிப்பு வசதிகள் எதுவும் இல்லை" என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க

விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் பந்தாடும் ஆளுநர்! - வலுக்கும் கண்டனங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன... மேலும் பார்க்க

`அந்த திட்டம் வேண்டாம்!' - அதிமுகவுக்கு `நோ' சொல்லிய திமுக?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தாலும் இன்னும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது அரசியல் களம். குறிப்பாக நேற்று இரவு வெளியான சில தகவல்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்கூட எதிர்பாராதவை. அதாவது, ... மேலும் பார்க்க

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணிய... மேலும் பார்க்க