செய்திகள் :

"நான் கிரிக்கெட்டைவிட்டு விலக தாதா தாவூத்தான் காரணம்" - லலித் மோடி அடுக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

post image

தான் நிரந்தரமாக கிரிக்கெட் உலகை விட்டு விலகியதற்கு, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது 'டி-கம்பெனி' நெட்வொர்க் கொடுத்த கொலை மிரட்டல்கள்தாம் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் லலித் மோடி.

2008- ஆம் ஆண்டு ஐபிஎல் அறிமுகப்படுத்தபட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இந்தத் தொடரை உருவாக்கியதில் லலித் மோடி முக்கிய பங்காற்றி இருக்கிறார்.

லலித் மோடி
லலித் மோடி

2010 ஆண்டு நிதி முறைகேடுகள், டெண்டர் முறைகேடுகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் காரணமாக ஐபிஎல் ஆணையர் பதவியில் இருந்து பிசிசிஐ இவரை இடைநீக்கம் செய்தது.

பின்னர் இவரது ஒழுங்கு நடவடிக்கையால் 2013ஆம் ஆண்டு பிசிசிஐ அவருக்கு ஆயுள் தடை விதித்தது. அதன் பிறகு லலித் மோடி லண்டன் சென்றுவிட்டார்.

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கும் அவர், "நான் நிரந்தரமாக கிரிக்கெட் உலகை விட்டு விலகியதற்கு, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது 'டி-கம்பெனி' நெட்வொர்க் கொடுத்த கொலை மிரட்டல்கள்தாம் காரணம்.

ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்திலேயே, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் 'டி-கம்பெனி' (D-Company) தரப்பு ஒரு ஐபிஎல் அணியில் பங்குகளைப் பெற்று, அதன் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்த முயன்றது.

ஆனால், அவர்களின் இந்த முயற்சிக்கு நான் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், அதற்கு அனுமதியளிக்கவும் மறுத்துவிட்டேன். இந்த மறுப்புக்குப் பிறகுதான், எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பல்வேறு வழிகளில் கொலை மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் வரத் தொடங்கின.

 தாவூத் இப்ராஹிம்
தாவூத் இப்ராஹிம்

ஐபிஎல்லைச் சுற்றி இயங்கி வந்த சட்டவிரோத சூதாட்ட மாஃபியாக்களுக்கு எதிராக நான் எடுத்த தீவிரமான நடவடிக்கைகளும், இந்த விவகாரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக எனக்கு ஆசையாகக் காட்டப்பட்ட பல நூறு மில்லியன் டாலர் லஞ்சப் பணத்தை நான் தூக்கியெறிந்ததும்தான் இந்த மிரட்டல்களுக்கு முக்கியக் காரணம்.

குறிப்பாக, தாவூத் இப்ராஹிமின் ஆட்கள் என்னை மும்பை, கேப்டவுன் மற்றும் லண்டனின் ஸ்லோன் ஸ்ட்ரீட் ஆகிய மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்து சமயம் பார்த்து கொலை செய்ய முயன்றனர்" என்று தெரிவித்திருக்கிறார்.

"பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜக-வின் புதிய உத்தி" - அண்ணாமலையை விமர்சித்த பெ.சண்முகம்

அண்ணாமலை, பாஜக-வில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். பின்னாளில் அது கட்சியாக உருவெடுக்கும் என்றும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார... மேலும் பார்க்க

'ஜம்பம் அடித்த பிரவீன் சக்கரவர்த்தி; உஷ்ணமான விஜய்!' - கம்யூ.,க்களை தேடி ஓடிய காங்கிரஸ்

தமிழகத்தில் காலியாக இருக்கும் ராஜ்ய சபா எம்.பி சீட்டை காங்கிரஸூக்கு கொடுத்திருந்தது தவெக. காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி இன்று தலைமைச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால், இ... மேலும் பார்க்க

`மோடி எதிர்ப்பு மட்டுமே போதுமா?' - ஸ்டாலின் முடிவும் இந்தியா கூட்டணியின் எதிர்காலமும்? - ஓர் அலசல்!

2023 ஜூன் மாதத்தில் 28 கட்சிகளுடன் தொடங்கப்பட்ட 'இந்தியா' கூட்டணி, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் தனிப்பெரும்பான்மையைத் தடுத்து நிறுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தது. அந்த தேர்தலில், உத்த... மேலும் பார்க்க

Annamalai: 'பாஜக துணை தலைவர் டு தொண்டர்' - அண்ணாமலையின் கோவை REWIND | Photo Album

ஆகஸ்ட 2020 - தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்று கோவைக்கு முதன்முதலில் வந்தபோது ஆகஸ்ட 2020 - தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக கோவையில் அண்ணாமலை முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு ஆகஸ்ட 2... மேலும் பார்க்க

கோவை பாஜக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா – அண்ணாமலை அமைப்பில் ஐக்கியம்

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், முன்னாள் கோவை மாநகர மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, தெற்கு மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் அக்கட்சியில்... மேலும் பார்க்க

முன்பு வேண்டாம் என்று மறுத்த `இந்தியா' ; மீண்டும் கதவைத் தட்டும் `ரஷ்யா!' Su-57 டீல் ஓகே ஆகுமா?

ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய் Su-57-ஐ இந்தியாவோடு இணைந்து தயாரிக்கத் தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் ஒருமுறை வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருக்கிறார். ஒரு காலத்தில் இதே திட்டத்... மேலும் பார்க்க