செய்திகள் :

நாயுடன் நடைபயிற்சி; விளையாட்டு வீரர்களை வெளியேற்றிய ஐ.ஏ.எஸ், டெல்லி மாநகராட்சி கமிஷனராக நியமனம்!

post image

டெல்லி மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இதற்கு முன்பு டெல்லியில் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளராக இருந்தபோது, நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார். 2022-ம் ஆண்டு தினமும் மாலையில் அங்குள்ள தியாகராஜ் மைதானத்தில் தனது நாயுடன் சஞ்சீவ் கிர்வார் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். சஞ்சீவ் நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக மைதானத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு இருந்த தடகள வீரர்கள் அனைவரையும் மாலை 7 மணிக்கே மைதானத்தை விட்டு வெளியேறும் படி கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தடகள வீரர்கள் வழக்கமாக இரவு 8.30 மணி வரை விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக மாலை 7 மணிக்கே எங்களை மைதானத்தை விட்டு வெளியேறும்படி கூறினர் என்று பயிற்சியாளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்த சஞ்சீவ், சில நேரம் நாயுடன் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். ஆனால் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தடகள வீரர்களுக்கு எந்த வித இடையூறும் செய்தது கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து அப்போது முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு வீரர்களுக்காக இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவித்தார். இந்த நாய் சர்ச்சையை தொடர்ந்து சஞ்சீவ் கிர்வாரை மத்திய உள்துறை அமைச்சகம் லடாக்கிற்கு இடமாற்றம் செய்தது. தற்போது டெல்லியில் பா.ஜ.க அரசு பதவியேற்றுள்ள நிலையில் சஞ்சீவ் கிர்வார் டெல்லி மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது டெல்லி மாநகராட்சி கமிஷனராக இருக்கும் அஸ்வனிகுமார் ஜம்மு காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

" தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது!"- காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. விசில் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள த... மேலும் பார்க்க

`ஆரம்பிக்கலாங்களா..!' - கோவையில் வேலுமணி கேம் ஸ்டார்ட் - செந்தில் பாலாஜி ஷாக்!

தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். கோவை மாவட்டம் அதிமுகவின் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்தமுறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக தீவிரமா... மேலும் பார்க்க

"அவருக்கு கோபம், மனக்கசப்புகள் இருந்தாலும்கூட..!"- டிடிவி NDA கூட்டணியில் இணைந்தது குறித்து அண்ணாமலை

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (ஜன.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்."அண்ணன் டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்... மேலும் பார்க்க

`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்!

நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ர... மேலும் பார்க்க

`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' - எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி... மேலும் பார்க்க