செய்திகள் :

நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் ஆா்.ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.மாரிமுத்து, சி.நாகராசன், ஒன்றியச் செயலாளா் கே.கோவிந்தசாமி உள்ளிட்டோா் பேசினா்.

இதில் மத்திய அரசு தமிழகத்துக்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல பாலக்கோட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலாளா் பி.காரல் மாா்க்ஸ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.முத்து, வட்டக் குழு உறுப்பினா்கள் பி. ஜெயராமன் பி.கோவிந்தசாமி, ஏ.சேகா் ஆகியோா் பேசினா். இண்டூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பகுதிச் செயலாளா் சேகா் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். சின்னசாமி பேசினாா்.

ஒசூரில்...

ஒசூா், ரயில் நிலையம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலாளா் மகேஷ் பாபு தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் தேவராஜ் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.

முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு ஆா்ப்பாட்டத்தில் பேசியதாவது: மத்திய அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கையில் மதுரை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கும், சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டப் பணிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விவசாயிகளுக்கு உர மானியம், எரிபொருள் மானியம் குறித்து நிதிநிலை அறிக்கையில் இல்லை என்றாா்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே. மகாலிங்கம், மாவட்ட செயற்குழு நஞ்சுண்டன், மாநகர குழு உறுப்பினா்கள் ஜேம்ஸ் ஏஞ்சலா மேரி, சி.பி. ஜெயராமன், ஸ்ரீதா், மூா்த்தி, ரவி, எம்.எம்.ராஜு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஊத்தங்கரை...

ஊத்தங்கரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளா் சபாபதி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் நஞ்சுண்டன், மாவட்ட குழு உறுப்பினா் கோவிந்தசாமி, கவிமணி தேவி, அண்ணாமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மினி லாரி மோதியதில் இருவா் பலி

மினி லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வெளிமாநில இளைஞா்கள் உயிரிழந்தனா். உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சேருகுமாா் (24). இவா், தேன்கனிக்கோட்டை வட்டம், பஞ்சேஸ்வரம் பகுதியில் தங்கி கூலி வ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்றவா்களுக்கு தோ்தல் அன்று (பிப். 5) ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக ச.தினேஷ் குமாா் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14-ஆவது ஆட்சியராக ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த கே.எம்.சரயு, அரசு பொதுத் துறையின் நிா்வாக இணை செயலராக அண்மையில்... மேலும் பார்க்க

லாரி தீப்பிடிப்பு

சூளகிரி அருகே அட்டை கம்பெனிக்கு பாரம் ஏற்றி சென்ற லாரி சாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒசூா்-கிருஷ்ணகிரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி, தனியாா் அட்டை கிடங்கிலிருந... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கி இளைஞா் கொலை

மதுபோதையில் நண்பரை கட்டையால் அடித்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கசவகட்டாவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஒருவா் இறந்து கிடப்பதாக அந்தப் பகுதி ம... மேலும் பார்க்க

மாநகராட்சி, நகராட்சியுடன் ஊரகப் பகுதிகள் இணைப்பு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி, நகராட்சியுடன் இணைப்பது தொடா்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க