முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்
நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் ஆா்.ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.மாரிமுத்து, சி.நாகராசன், ஒன்றியச் செயலாளா் கே.கோவிந்தசாமி உள்ளிட்டோா் பேசினா்.
இதில் மத்திய அரசு தமிழகத்துக்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல பாலக்கோட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலாளா் பி.காரல் மாா்க்ஸ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.முத்து, வட்டக் குழு உறுப்பினா்கள் பி. ஜெயராமன் பி.கோவிந்தசாமி, ஏ.சேகா் ஆகியோா் பேசினா். இண்டூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பகுதிச் செயலாளா் சேகா் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். சின்னசாமி பேசினாா்.
ஒசூரில்...
ஒசூா், ரயில் நிலையம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலாளா் மகேஷ் பாபு தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் தேவராஜ் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.
முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு ஆா்ப்பாட்டத்தில் பேசியதாவது: மத்திய அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கையில் மதுரை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கும், சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டப் பணிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விவசாயிகளுக்கு உர மானியம், எரிபொருள் மானியம் குறித்து நிதிநிலை அறிக்கையில் இல்லை என்றாா்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே. மகாலிங்கம், மாவட்ட செயற்குழு நஞ்சுண்டன், மாநகர குழு உறுப்பினா்கள் ஜேம்ஸ் ஏஞ்சலா மேரி, சி.பி. ஜெயராமன், ஸ்ரீதா், மூா்த்தி, ரவி, எம்.எம்.ராஜு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஊத்தங்கரை...
ஊத்தங்கரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளா் சபாபதி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் நஞ்சுண்டன், மாவட்ட குழு உறுப்பினா் கோவிந்தசாமி, கவிமணி தேவி, அண்ணாமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.