செய்திகள் :

நீலகிரி: குப்பையில் தவறிய தங்க மோதிரம்; தேடி உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணிப் பெண்கள்!

post image

நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது மைல் பகுதியைச் சேர்ந்தவர் கதீஜா. வழக்கம்போல் வீட்டின் குப்பைகளை சேகரித்து நகராட்சி தூய்மை வாகனத்தில் நேற்று முன்தினம் காலை கொடுத்திருக்கிறார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது கையில் அணிந்திருந்த அரை பவுன் மோதிரம் ஒன்றை தவறிவிட்டிருப்பதைக் கண்டு கவலையடைந்திருக்கிறார். வீட்டில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் குப்பையில் தவறியிருக்கலாம் என சந்தேகித்த கதீஜா, இது குறித்து கூடலூர் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார்.

Rep image AI

சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளர்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்றிருக்கிறது நகராட்சி நிர்வாகம். அந்த பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட சுமதி, ஜோதி ஆகிய இரண்டு பெண்களும் உடனடியாக குப்பைக் கிடங்கிற்குச் சென்று, குப்பைகளை கொட்டிய இடத்தில் நீண்ட நேரம் தேடி ஒருவழியாக மோதிரத்தைக் கண்டறிந்து நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். கதீஜாவை வரவழைத்து மோதிரத்தை அவர் கையில் ஒப்படைத்திருக்கிறார்கள். குப்பையில் தவறவிட்ட அரை பவுன் மோதிரத்தை தேடி உரியவரிடம் ஒப்படைத்த பெண்களுக்கு பரிசாக புத்தாடைகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறது நகராட்சி நிர்வாகம்.

கோயிலில் விடப்பட்ட மூதாட்டி; பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க உதவிய டிஎஸ்பி; பொன்னமராவதியில் நெகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அழகியநாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பித்தளைப் பாத்திரம், பழைய இரும்புப் பெட்டி, சேலையுடன் மூதாட்டி ஒருவர் கொண்டுவந்து விடப்பட்டார்.உணவின்... மேலும் பார்க்க

`எதுக்கு தேவையில்லாத வேலைன்னு சொன்னாங்க; ஆனா...' - மனநலம் குன்றியவர்களை அரவணைக்கும் தட்சிணாமூர்த்தி

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருச்சேறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம் 'சுடர் இல்லம்' என்ற பெயரில் கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகிறது. சுடர் இல்லத்தை இத்தனை ஆண்டுக்காலம் எந்தவித எதிர... மேலும் பார்க்க