செய்திகள் :

"நூற்றுக்கணக்கான நடிகர்கள்; 100 நாள்கள் படப்பிடிப்பு!"- ‘பள்ளிச்சட்டம்பி’ படம் குறித்து டொவினோ தாமஸ்

post image

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார்.

ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (மார்ச்.30) நடைபெற்றது. இதில் டொவினோ தாமஸ் கலந்துகொண்டார்.

‘பள்ளிச்சட்டம்பி’
‘பள்ளிச்சட்டம்பி’

"2018 ஆம் ஆண்டே இப்படத்தின் கதையை பற்றி நானும், டிஜோ ஜோஸும் (இயக்குநர்) விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை வடிவமைத்து 2025-ம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம்.

நாங்கள் இருவரும் வேறு வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தோம். அதனால் இப்படத்தின் பணிகளை தொடங்க தாமதம் ஆனது. நூறு நாள்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது.

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. இது ஒரு பீரியட் மூவி.

1957- 58 காலகட்டத்தைச் சார்ந்த படம். அந்தக் காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும். இது உண்மைச் சம்பவம் அல்ல.

டொவினோ தாமஸ்
டொவினோ தாமஸ்

ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்தப் படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்று பேசியிருக்கிறார்.

'துல்கர் சல்மானுக்கும் எனக்கும் பிரச்னையா?'- டொவினோ தாமஸ் விளக்கம்

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார். ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்த... மேலும் பார்க்க

"அப்பா அந்த சமயத்துல இறந்துட்டாரு; நான் சினிமாவுக்கு வந்தது அம்மாவுக்கு பிடிக்கல.!"- நிவின் பாலி

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான நிவின் பாலி தனது முதல் படமான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்பின் ஆடிஷன் குறித்து பகிர்ந்திருக்கிறார். மலையாள ஊடகமான மனோரமாவிற்கு அளித்திருக்கும் பேட்டியில் பேசியிருக்கும் ந... மேலும் பார்க்க

Drishyam 3: 'த்ரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு; காரணம் என்ன?

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது மோகன்லாலின் 'த்ரிஷ்யம் 3'. ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் முன்பு ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவித்திருந்தார்கள்.... மேலும் பார்க்க

'அது இல்லாமல் சாத்தியமில்லை!'; முதல் படமும் 100-வது படமும் மோகன்லால் உடன் தான் - வெளியான அப்டேட்

சீனியர் இயக்குநர் பிரியதர்ஷன் அவருடைய 100-வது படத்தை இயக்குவதற்கு தயாராகிவிட்டார். 1984-ல் இவருடைய முதல் படமான 'பூச்சக்கொரு மூக்குத்தி (Poochakkoru Mookkuthi)' திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில... மேலும் பார்க்க

"நீங்கள் போதைப்பொருளை ஊக்குவிப்பதாக மக்கள் நினைக்க மாட்டார்களா?" - மம்மூட்டியைச் சாடும் ஹரீஷ் பெராடி

மலையாள இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி 'மட்டாஞ்சேரி மாஃபியா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆசிஃப் அலி, நஸ்லென் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில... மேலும் பார்க்க