செய்திகள் :

'பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கிறது; அதனால், எனக்கு லாபம்" - தனது வருமான உயர்வு குறித்து ட்ரம்ப்

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது குடும்பத்தின் கிரிப்டோகரன்சி தொழில்கள் மூலம் மட்டும் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் டாலரை சம்பாதித்துள்ளார்.

அது குறித்து நேற்று (ஜூலை 1, 2026), ட்ரம்பிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவரது விளக்கம்...

"என்னுடைய தனிப்பட்ட நிதி விவகாரங்களில் நான் நேரடியாகத் தலையிடுவதில்லை. என் பணத்தை நிர்வகிப்பதற்கென்றே சில பிரத்யேக நிதி நிறுவனங்கள் உள்ளன.

கிரிப்டோ கரன்சி
கிரிப்டோ கரன்சி

நான் அதிபராவதற்கு முன்பே பெருமளவில் பணம் ஈட்டியவன். அவர்கள் என் பணத்தை வெவ்வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். நான் அவர்களுடன் பேசுவதே இல்லை. ஒருபோதும் தொடர்புகொள்வது கிடையாது.

என்னிடம் பல பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். 'மூடப்பட்ட கணக்குகள்' (Blind Trust) என்று சொல்வார்களே, அதுபோன்ற ஒரு அமைப்பில் நாம் பணத்தைச் செலுத்திவிட்டால் அதோடு சரி, அதன்பின் நாம் அவர்களுடன் விவாதிக்க முடியாது.

அவை பெரிய நிறுவனங்கள், அவர்கள்தான் அதை முழுமையாக நடத்துகிறார்கள். எவ்வாறாயினும், வணிகத் துறையில் எனக்கு மிகச்சிறந்ததொரு தொழில் வாழ்க்கை அமைந்திருந்தது என்பதை நான் மறுக்க முடியாது.

நான் ஏன் இப்போது லாபம் ஈட்டுகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், இப்போது பங்குச்சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

இதனால் இங்கு எல்லாரும் தான் லாபம் சம்பாதிக்கிறார்கள். உங்களிடம் ஒரு '401k' (அமெரிக்க ஓய்வூதியத் திட்டம்) கணக்கு இருந்தால், அதன் தற்போதைய நிலையைச் சற்றே கவனித்துப் பாருங்கள். அது கிட்டத்தட்ட 85 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அதற்காக நீங்கள் அதிபர் ட்ரம்பிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

எனவே, இங்கு நாம் அனைவரும் தான் லாபமடைகிறோம். என்னிடம் பெருமளவிலான பணமும் ரொக்கமும் இருப்பதால், அதை நான் பெரிய நிதி நிறுவனங்களிடம் கொடுத்துள்ளேன். அதன் மூலம் எனக்கும் லாபம் கிடைக்கிறது.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிகிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் பரவலான பல துறைகளில் என் பணத்தை முதலீடு செய்கிறார்கள்."

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க