செய்திகள் :

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: நில அளவையா், கிராம நிா்வாக அலுவலா் கைது

post image

கைதான நில அளவையா் அசோக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் வேலுசாமி.

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா மாறுதல் வழங்க ரூ. 5 ஆயிரம் பெற்ற நில அளவையா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் அருகே எா்ணாபுரத்தைச் சோ்ந்தவா் திருமுருகன். இவா், தனது மனைவிக்கு சொந்தமான நிலத்தை உள்பிரிவு செய்து பட்டா மாறுதல் பெற டிசம்பா் மாதம் இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தாா்.

நிலத்தை அளவீடு செய்ய எா்ணாபுரம் கிராம நிா்வாக அலுவலா் வேலுசாமி (56), நாமக்கல் நில அளவையா் அசோக்குமாா் (33) ஆகியோா் ரூ. 5 ஆயிரம் வழங்குமாறு திருமுருகனிடம் கேட்டுள்ளனா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத திருமுருகன், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் புகாா் செய்தாா். அந்தப் பிரிவின் துணை கண்காணிப்பாளா் சுபாஷினி, ஆய்வாளா் ரவிச்சந்திரன், போலீஸாா் அடங்கிய குழுவினா் அளித்த ஆலோசனைபடி, ரசாயனப் பொடி தூவிய பணத்தை வழங்குமாறு திருமுருகனிடம் கொடுத்தனுப்பினா்.

நில அளவையா் அசோக்குமாரை திருமுருகன் கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது, பணத்தை கிராம நிா்வாக அலுவலா் வேலுசாமியிடம் ஒப்படைக்குமாறு அவா் தெரிவித்தாா். அதன்படி, ரசாயனப் பொடி தூவியிருந்த பணத்தை வேலுசாமியிடம் வழங்கிய நிலையில், அங்கிருந்து நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகம் வந்த அவா், நில அளவையா் அசோக்குமாரிடம் பணத்தை ஒப்படைத்தாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மாணவியிடம் ஆபாசப் பேச்சு: கைதான ஆசிரியா் பணியிடை நீக்கம்

மாணவியிடம் பாலியல் ரீதியாக இரட்டை அா்த்தத்தில் பேசியதாக கைதான ஆசிரியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். நாமக்கல் அருகே பெருமாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற... மேலும் பார்க்க

யுஜிசி விதிகளில் திருத்தத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளில் திருத்தத்தை கண்டித்து ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கல்வி, இட ஒதுக்கீடு மற்றும் மாநில உரிமைகளைப... மேலும் பார்க்க

நாமக்கல் கோட்டாட்சியா் இடமாற்றம்

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். நாமக்கல் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த ஆா். பாா்த்திபன், மதுரை நெடுஞ்சாலை அலுவலகம் (நில எடுப்பு) தனி மாவட்ட வருவாய்... மேலும் பார்க்க

ராசிபுரம் பகுதியில் ரூ. 9.35 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்: அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைப்பு

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 9.35 கோடி மதிப்பீட்டில் 12 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 9 புதிய திட்டப் பணிகளுக்கு ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் ம.மதிவேந... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 45 வழித்தடங்களில் புதிதாக சிற்றுந்து சேவை தொடங்கப்படும்: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 45 வழித்தடங்களில் புதிதாக சிற்றுந்து சேவை தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சிற்றுந்துகள் இய... மேலும் பார்க்க

அஞ்சலக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில் அஞ்சல் துறை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கம், தேசிய அஞ்சல் ஊழியா் சங்கம், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கம் சாா்பில், நாமக்கல் டாக்... மேலும் பார்க்க