செய்திகள் :

`பதவி வெறி கண்ணை மறைத்தால்... தகப்பன்கூட எதிரியாகத்தான் தெரிவார்!' - அன்புமணியைச் சாடும் சகோதரி மகன்

post image

சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தியின் மகனும், மாநில செயற்குழு உறுப்பினருமான சுகந்தன் பேசுகையில், "எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு. எனக்கு தமிழில் பிடித்த ஒரே வார்த்தை நன்றி உணர்வு. எனக்கு அரசியல் ஆசை எல்லாம் கிடையாது. இந்த மேடைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் தாத்தாவுக்காக வந்துள்ளேன். என் தம்பி முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவி கொடுத்தார். இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவிக்கிறார். `அடுப்பு பற்றவில்லை... நான்கு மாதங்கள்தான் கட்சியில் சேர்ந்து ஆகிறது' என்று பேசினார். இது ஒரு கேவலமான செயல்...

சுகந்தன்

என் மாமா அன்புமணியிடம் ஒரு கேள்வி? அன்புமணி கட்சியில் சேர்ந்தது 2004 ஆம் ஆண்டு, அப்பொழுது இளைஞர் அணித் தலைவராக மாறினார். அதே ஆண்டில் ராஜ்ய சபா எம்.பி ஆனார். அதே ஆண்டில் மத்திய அமைச்சராக ஆனார். இது ஸ்பீடு இல்லையா... நீங்கள் ஒரே ஆண்டில் மத்திய அமைச்சராக ஆகலாம். என் தம்பி உழைத்து வந்தால் தவறா? அன்புமணி கட்சியில் சேர்ந்த ஒரே ஆண்டில் பல்வேறு பதவிகளைப் பெறலாம், என் தம்பி பெறக் கூடாதா? உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா... பதவி வெறி கண்ணை மறைத்துக் கொண்டால் பெற்ற தகப்பன்கூட எதிரியாகத்தான் தெரிவார். ராமதாஸ் எனக்கு தாத்தா மட்டும் அல்ல ஹீரோ" என்று பேசினார்.

`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார்.செல்வப்பெருந்தகை பள்ளி விழா ... மேலும் பார்க்க

கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார்.இவர்கள் இருவரும் ... மேலும் பார்க்க

TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 ... மேலும் பார்க்க

`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில்... மேலும் பார்க்க

அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!

தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அதிருப்தியில் ராமதாஸ்பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் ... மேலும் பார்க்க