செய்திகள் :

`பதவி வெறி கண்ணை மறைத்தால்... தகப்பன்கூட எதிரியாகத்தான் தெரிவார்!' - அன்புமணியைச் சாடும் சகோதரி மகன்

post image

சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தியின் மகனும், மாநில செயற்குழு உறுப்பினருமான சுகந்தன் பேசுகையில், "எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு. எனக்கு தமிழில் பிடித்த ஒரே வார்த்தை நன்றி உணர்வு. எனக்கு அரசியல் ஆசை எல்லாம் கிடையாது. இந்த மேடைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் தாத்தாவுக்காக வந்துள்ளேன். என் தம்பி முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவி கொடுத்தார். இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவிக்கிறார். `அடுப்பு பற்றவில்லை... நான்கு மாதங்கள்தான் கட்சியில் சேர்ந்து ஆகிறது' என்று பேசினார். இது ஒரு கேவலமான செயல்...

சுகந்தன்

என் மாமா அன்புமணியிடம் ஒரு கேள்வி? அன்புமணி கட்சியில் சேர்ந்தது 2004 ஆம் ஆண்டு, அப்பொழுது இளைஞர் அணித் தலைவராக மாறினார். அதே ஆண்டில் ராஜ்ய சபா எம்.பி ஆனார். அதே ஆண்டில் மத்திய அமைச்சராக ஆனார். இது ஸ்பீடு இல்லையா... நீங்கள் ஒரே ஆண்டில் மத்திய அமைச்சராக ஆகலாம். என் தம்பி உழைத்து வந்தால் தவறா? அன்புமணி கட்சியில் சேர்ந்த ஒரே ஆண்டில் பல்வேறு பதவிகளைப் பெறலாம், என் தம்பி பெறக் கூடாதா? உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா... பதவி வெறி கண்ணை மறைத்துக் கொண்டால் பெற்ற தகப்பன்கூட எதிரியாகத்தான் தெரிவார். ராமதாஸ் எனக்கு தாத்தா மட்டும் அல்ல ஹீரோ" என்று பேசினார்.

"பாஜகவின் 'இந்த' செயல் 'Operation Success Patient Dead' நிலைமை" - ஸ்டாலின் பேச்சு

இன்று திருப்பூரில் ’வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு பேசியதாவது, "கருப்பு சிவப்பு உடைகளில் இவ்வளவு பெண்கள... மேலும் பார்க்க

``எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினோமா? 'இவர்கள்' பறைசாற்றுவார்கள்" - மகளிர் மாநாட்டில் கனிமொழி

திருப்பூர், காரணப்பேட்டையில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மக்களவை எம்.பி கனிமொழி பேசியதாவது..."இந்த மேடையில் தமிழ்நாடு முதலமை... மேலும் பார்க்க

`தேர்தலுக்குப் பிறகு அன்புமணி ஜீரோவுக்குப் போவார்' - பாமக அருள் பேச்சு

சேலத்தில் நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இணைச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான அருள் உரையாற்றினார். அப்போது அவர், ``எப்படி இருக்க வேண்டும் என்பதற்... மேலும் பார்க்க

DMDK: திமுக, அதிமுக, தவெக... யாருடன் கூட்டணி? தேமுதிகவின் திட்டம் தான் என்ன?

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2026) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரச்சாரம், பொதுக்கூட்டம் த... மேலும் பார்க்க

`சில்லறை பசங்களை வைத்துக் கொண்டு, அவமானப்படுத்துகிறார்..!" - அன்புமணி குறித்து மனம் நொந்த ராமதாஸ்

சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியது, "எனக்கு இருக்கிற ஆதங்கத்தை கொட்டி உங்களிடம் பகிர்ந்... மேலும் பார்க்க

பல்லடம்: 1.5 லட்சம் பெண்கள்... கறுப்பு, சிவப்பு டிரெஸ் கோடு; செ.பா-வின் மகளிர் மாநாடு ஏற்பாடுகள்!

2026 சட்டமன்றத் தேர்தல் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் கடந்த காலங்களில் தோல்வியைச் சந்தித்ததால், இந்த முறை திமுக அந்தப் பகுதியில் வெற்றி பெற அதிக கவனம் ச... மேலும் பார்க்க