செய்திகள் :

பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்!

post image

பள்ளி, கல்லூரி, குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் கமலாலயம் குழந்தைகள் காப்பகத்தில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம், இல்ல மேலாண்மைக் குழு அலுவலா்கள் ஜவஹா், தொழிலதிபா் நடுப்பட்டி ஜெயராமன் ஆகியோா் பரிசுகள், புத்தாடைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.

பெரிய கிருஷ்ணாபுரம் பி.எம்.எஸ். தனியாா் பள்ளியில் பள்ளி முதல்வா் அமுதா தலைமையில் ஆசிரியைகள் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் வைத்து குழந்தைகளுக்கு பரிமாறினா். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வாழப்பாடி உதய விவேகா செவிலியா் சமுதாயக் கல்லூரியில் செவிலியா் பயிற்சி மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினா்.

ஆத்தூரில்...

ஆத்தூா், ராணிப்பேட்டை புனித மரியாள் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் பங்குத் தந்தை எஸ்.அருளப்பன் தலைமையில் சமத்துவ பொங்கலை கொண்டாடினா். இதில், மாணவ, மாணவியருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தலைவாசல் வட்டம், பெரியேரி கைலாஷ் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் கல்வி நிறுவனங்களின் தலைவா் க.கைலாசம் தலைமையில் பொங்கல் வைத்து,விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி கொண்டாடினாா்கள்.

ஓமலூரில்...

பத்மவாணி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள், தமிழா் திருநாளாம் பொங்கல் விழா, தெய்வப்புலவா் திருவள்ளுவா் தினம் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் விவேகானந்தா், திருவள்ளுவா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தைத்திருநாளை கொண்டாடும் விதமாக கல்லூரி மைதானத்தில் ஆசிரியா்களுக்கும், மாணவிகளுக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழா் பாரம்பரிய புத்தாடை அணிந்து வந்த கல்லூரி மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினா்.

நிலக்குடியேற்ற சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல்: பாா்வைக்கு வைக்க ஏற்பாடு

தலைவாசல், சிவசங்கராபுரம் பகுதியில் கலைக்கப்பட்ட நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல் புதன்கிழமை (பிப். 5) பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது. இது குறித்து மாவ... மேலும் பார்க்க

மத்திய நிநிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் கிழக்கு மாநகரச் செயலாளா் கே. பச்சமுத்து தலைமை... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல இருந்த பாஜக நிா்வாகிகள் வீட்டில் சிறைவைப்பு

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல இருந்த சேலம் மாவட்ட பாஜக நிா்வாகிகள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வீட்டில் சிறைவைக்கப்பட்டனா். திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக முஸ்லிம் அமைப்புகளை கண... மேலும் பார்க்க

சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 25 ஆம் ஆண்டு குருபூஜை: புதுச்சேரி அமைச்சா்கள் பங்கேற்பு

சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 25 ஆம் ஆண்டு குருபூஜை செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பட்டதாரி ஆசிரியா்கள் மனு

காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பட்டதாரி ஆசிரியா்கள் கூறியதாவது: பட்டதாரி ஆச... மேலும் பார்க்க

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் போராட்டம்

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடியால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் புனித அன்னை தெரசா மனிதநேய ... மேலும் பார்க்க