செய்திகள் :

பழனி கோயில் சொத்துகள் முறைகேடாக பத்திரப் பதிவு; சார் பதிவாளர் சஸ்பெண்ட்!

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் அடிவார பகுதியில்  கோயிலுக்கு சொந்தமாக 100 கோடி மதிப்பிலான  1.40 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலம் 1888 ஆம் ஆண்டு தண்டாயுதபாணி சுவாமி திருமடத்திற்கு பராமரிப்பு மற்றும் வழிபாட்டுத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த நிலைத்தை விற்பனை செய்யவோ அல்லது மாற்றம் செய்யவோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலத்​தின் மூலம் கிடைக்கும் வரு​வாய் கோயில் கட்​டளைக்கு பயன்​படுத்​தப்​பட்டு வந்த நிலையில், காலப்​போக்​கில் இந்த நிலத்தை தனி​யார் சிலர் ஆக்​கிரமித்​தனர்.

இது தொடர்​பாக, பழநி தேவஸ்​தானம் சார்​பில் உயர் நீதி​மன்​றம், உச்ச நீதிமன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றங்​கள், தண்​ட​பாணி சுவாமி மடத்​துக்​கு, பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயில் இணை ஆணை​யரை தக்​காராக நியமித்ததுடன் இந்த நிலத்தை தேவஸ்​தானத்​துடன் இணைத்​தும் உத்​தர​விட்​டன.

பார்க்கிங்காக மாற்றப்பட்டுள்ள கோயில் நிலம்

இதையடுத்​து, தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்கு சொந்​த​மான 1.40 ஏக்​கர் நிலம், தக்​கார் மற்​றும் பழநி கோயில் இணை ஆணை​யரான மாரி​முத்து தலை​மை​யில் 60 ஆண்​டுகளுக்கு பிறகு கடந்த 2025 செப்.12-ம் தேதி மீட்​கப்​பட்​டு பழநி முரு​கன் கோயிலுக்கு வரும் பக்​தர்​களின் வசதிக்​காக இலவச வாகன நிறுத்​தமாக, பயன்​படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் , பழநி இணை சார் பதி​வாளர் மூலம் 6-ம் தேதி தண்​ட​யுதபாணி சுவாமிகள் மடத்​துக்கு சொந்​த​மான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து 100 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் 2 கோடிக்கு வெள்ளைதுரை, சேதுபதி ஆகியோர் பெயரில் முறைகேடாக பத்திர பதிவு செய்யப்பட்டது.

 இந்த பத்​திரப்பதிவை ரத்து செய்​யக் கோரி, பதிவுத்​துறை தலை​வருக்கு பழநி கோயில் இணை ஆணை​யர் மாரி​முத்து அறிக்கை அனுப்​பினார்.

பழனி திருக்கோயில்

இந்நிலையில் மோசடியாக பத்திரப் பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் பத்திரப் பதிவு அலுவலரான ஜஸ்டின் மணிகண்டன், ஒரே ஒரு நாள் மட்டும் பழனி சார்பதிவாளராக பணியாற்றி இந்த பத்திரப் பதிவு மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின்போது 18 பெண்கள் இறப்பு - ராஜஸ்தானில் அதிர்ச்சி!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த மே மாதம் முதல் பிரசவத்திற்குப் பிறகு 18 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைக்கு உட்படுத்தப... மேலும் பார்க்க

அரியலூர்: `டாஸ்மாக் கடை மீது காட்டிய அக்கறையை மாணவர்கள் மீது காட்டவில்லை'- போலீஸ் மீது குற்றச்சாட்டு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் கடந்த 11ம் தேத... மேலும் பார்க்க

அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குளறுபடி: தலைவர் சுனேத்ரா பவார் பதவி விலக 15 நாள் கெடு!

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் இந்த ஆண்டு தொடக்கத்தில் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் அவசர அவசரமாக துணை முதல்வர் பத... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதிக்கு ஜாக்பாட்; முதல் கட்டமே ரூ.1,013 கோடி - முழு விவரம் தெரியுமா?

தமிழக முதல்வரும், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான விஜய், தனது எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவின் போது தொகுதி குறித்து ஆய்வு செய்ததன் அடிப்படையில், பெரம்பூர் தொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அ... மேலும் பார்க்க

America: ``ஹார்முஸைக் கடக்கும் கப்பல்களுக்கு 20% வரி வேண்டும்'' - அதிபர் ட்ரம்ப் பதிவும் சர்ச்சையும்

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உலகின் மிக முக்கியமான கடல்வழி வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழ... மேலும் பார்க்க