செய்திகள் :

``ரூ. 104 கோடி மதிப்பிலான 1.27 கோடி படுக்கை விரிப்புகள் திருட்டு" - இந்திய ரயில்வே தகவல்

post image

இந்திய ரயில்வேயின் ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் பெட்ஷீட்கள், துண்டுகள், தலையணை உறைகள் மற்றும் போர்வைகள் போன்ற படுக்கை விரிப்பு பொருட்கள் பெருமளவில் திருடப்பட்டு வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ளது.

2022 ஜனவரி முதல் 2026 மே வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 1.27 கோடிக்கும் அதிகமான படுக்கை விரிப்பு பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இரயில்வேயின் மொத்தம் உள்ள 69 கோட்டங்களில் 54 கோட்டங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

திருடப்பட்ட இந்தப் பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ.104 கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் பெட் ஷீட்
ரயில் பெட் ஷீட்

கடந்த 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தத் திருட்டுகள் 56 சதவீதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக டெல்லி, மும்பை, அகமதாபாத், ராஞ்சி, பிகானெர், ஜெய்ப்பூர், பிலாஸ்பூர் உள்ளிட்ட 10 முக்கிய ரயில்வே கோட்டங்களிலேயே ஒட்டுமொத்த திருட்டுச் சம்பவங்களில் 67 சதவீத வழக்குகள் பதிவாகியுள்ளன.

இது ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் உரியது அல்லாமல், நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் பரவலாக நடக்கும் ஒரு தேசிய அளவிலான சவாலாக உருவெடுத்துள்ளது எனக் கூறப்படுகிறது.

ரயில் பெட்டிகளில் இருந்து ஊழியர்களால் சேகரிக்கப்படும் இந்தத் துணிகள், டிப்போக்கள் மற்றும் சலவையகங்களுக்கு இடையே கொண்டு செல்லப்படும் இடைப்பட்ட நேரமே திருட்டுகளுக்கு மிகவும் சாதகமான பகுதியாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

மேலும், இந்தத் துணிகள் பொதுப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்படுவதால் மிகவும் உறுதியாகவும், நீடித்து உழைக்கக்கூடியதாகவும் இருக்கும். இதனால் பலர் இவற்றை வீட்டு உபயோகத்திற்காகவும், 'இலவச நினைவுப் பரிசாகவும்' எடுத்துச் செல்கின்றனர். சில பயணிகள் தங்களது பயணச்சீட்டுக் கட்டணத்திலேயே இந்தப் படுக்கை விரிப்புகளின் விலையும் அடங்கும் என்று தவறாக நினைத்து எடுத்துச் செல்கின்றனர்.

இந்தியன் ரயில்வே
இந்தியன் ரயில்வே

இவ்வாறு திருடுபோகும் பொருட்களுக்கான இழப்பை ரயில்வே நிர்வாகம் ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்கிறது. இதனால், ரயில்களில் மிகக் குறைந்த ஊதியத்திற்குப் பணிபுரியும் ஏழை ஊழியர்களின் (Coach Attendants) சம்பளத்தில் இருந்து இந்த இழப்புத் தொகை பிடிக்கப்படுவதாக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் தீவிரப் சோதனைகள் மூலம் ரயில்வே நிர்வாகம் இதைத் தடுக்க முயன்றாலும், பொதுச் சொத்துக்களைப் பொறுப்புடன் பயன்படுத்தும் விழிப்புணர்வு பயணிகளிடம் ஏற்படும் போது மட்டுமே இதற்கு முழுமையான தீர்வு காண முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

சாதியும் ஆணவமும் நம் பிள்ளைகளைக் கொலை செய்வதைத் தடுப்போம்!

இலக்கியத்திலும் சினிமாக்களிலும் காதலைக் கொண்டாடுகிற நம் சமூகம், எதார்த்தத்தில் அதற்கு எதிராகவே செயல்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாள்களில் மட்டும் காதலித்த குற்றத்துக்காக பல இளம் உயிர்கள் பறிபோயுள்... மேலும் பார்க்க

விகடன் செய்தி எதிரொலி: பயன்பாட்டுக்கு வந்த பூம்புகார் கடற்கரை கழிவறை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் பகுதியானது வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகும். இங்கு கடற்கரை மட்டுமன்றி, இரட்டைக் காப்பியங்களைப் பறைசாற்றும் சிலப்பதிகார கலைக்கூடமும் இடம்பெற்றுள்ளது.... மேலும் பார்க்க

``எழுத்தாளர் பூமணியின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை" - முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய ஆளுமையும், சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான பூமணி (79), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் காலமானார்.கரிசல் ம... மேலும் பார்க்க

ITR Filing சீசன் இது; இன்னும் ஆதார் - பான் எண்ணை இணைக்கவில்லையா? என்ன, எப்படி செய்யலாம்? | How to

ஆதார் கார்டும், பான் கார்டும் இணைக்க வேண்டும். அப்படியில்லை என்றால், பான் கார்டு செல்லாது என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த வலியுறுத்தல் எப்போது முக்கியமோ, இல்லையோ, இப்போது இதை கட... மேலும் பார்க்க

PF: ரூ.5 லட்சத்திற்கு Auto settlement, 75% பணம் எடுக்கலாம், கூடுதல் வட்டி - EPFO புது அப்டேட் லிஸ்ட்

சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி வலைதளம் மற்றும் அதன் ஆப்பான UMANG அப்டேட் செய்யப்பட்டது. இந்த அப்டேட் மூலம் என்னென்ன விஷயங்கள் எளிதாக்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்...> புதிய CITES திட... மேலும் பார்க்க

கரூர்: `நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிக அரசு பணி வழங்கலாம்' - உயர் நீதிமன்றம்

கரூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழ்நதவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் விஜய் கருணை அடிப்படையிலான அரசு பணி நியமன ஆணைகளை வழங்கவிருக்கிறார். இந்நிலையில் கரூர் கூட்... மேலும் பார்க்க