செய்திகள் :

பாகிஸ்தான் வான்வெளியில் இனி விமானங்கள் பறக்க தடையில்லை!

post image

இஸ்லாமாபாத்: போர் நிறுத்தம் எதிரொலியாக பாகிஸ்தானில் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் சீராகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி அறிவித்த நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த தடை விதித்து கடந்த 24-ஆம் தேதி அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கையை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், போர் நிறுத்தம் செய்து கொள்ளலாமென இன்று மாலை அதிரடியாக அறிவித்திருக்கிறது பாகிஸ்தான். இதற்கு இந்தியாவும் சம்மதித்துள்ளதைத் தொடர்ந்து, மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வான்வெளியில் இனி விமானங்கள் பறக்க தடையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, விரைவில் விமான சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா- பாகிஸ்தான் பதற்றத்தைத் தணிக்க வலியுறுத்திய நாடுகள்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக பல்வேறு நாடுகள் இது தொடா்பாக கருத்து தெரிவித்தன. ஜி7 நாடுகள்: இந்தியாவும் பாகிஸ்தானும் மிகுந்த கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க ... மேலும் பார்க்க

மசூத் அஸாா் மைத்துனா் உள்பட பல முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழப்பு: ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கால் சா்ச்சை

கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய பயணிகள் விமானக் கடத்தலின் மூளையாக செயல்பட்ட மசூத் அஸாரின் மைத்துனரான முகமது யூசுஃப் அஸாா் உள்பட இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகள் 5 போ் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்... மேலும் பார்க்க

போர் நிறுத்தம்: பின்னணியில் யார்? பாகிஸ்தானுக்கு தொடர் அழுத்தம்!

இந்தியாவுடன் போர் நிறுத்தம் செய்துகொள்ள சம்மதம் என்று அதிரடியாக அறிவித்துவிட்ட பாகிஸ்தான் ர்வதேச நாடுகளின் அழுத்தத்துக்குப் பணிந்ததா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்திய ர... மேலும் பார்க்க

சிந்து நதி நீர் உடன்பாடு: தற்போதைய நிலையே தொடரும்! - மத்திய அரசு

புது தில்லி: பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து திறந்துவிடப்பட்ட சிந்து நதி நீர் விவகாரத்தில், முன்னதாக அறிவித்தபடி இதே நிலைப்பாடே தொடரும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

திராவிடத்துக்கும் பலூசிஸ்தானுக்கும் என்ன தொடர்பு? சுவாரசியமான வரலாறு!

திராவிடத்துக்கும் மேற்கு பாகிஸ்தனிலுள்ள பலூசிஸ்தானுக்கும் என்ன தொடர்பு? என்பதைப் பற்றிய சுவாரசியமான வரலாற்றை விரிவாகப் பார்க்கலாம். பலூசிஸ்தான் - இருபதாண்டுகளுக்கும் மேலாக செய்திகளில் இடம் பெற்ற ஒரு ச... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்துக்குப் பாகிஸ்தான் ஒப்புதல்: துணைப் பிரதமர்

இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகப் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் தெரிவித்துள்ளார். எல்லையில் இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த மே 7ஆம் தொடங்க... மேலும் பார்க்க