செய்திகள் :

50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது! - அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்

post image

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் சட்டசபை பதவிக்காலம் வருகிற மே, ஜூன் மாதங்களில் முடிவுக்கு வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.

Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர்
Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர்

வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். மேற்கு வங்கத்தில் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும்.

முதல் கட்டம் ஏப்ரல் 23ஆம் தேதியும், இரண்டாவது கட்டம் ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும்." எனத் தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளன. அதன் முதல் கட்டமாக தலைமை செயலகத்திலுள்ள அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

அரசு செலவில் அரசியல் விளம்பரங்கள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உரிய ஆவணங்கள் இன்றி 50,000 ரூபாய்-க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும்.

விமர்சனங்கள் கொள்கைகள், செயல்திறன் மற்றும் திட்டங்களை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்; தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்தக்கூடாது. ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு சார்பாக பக்கபலமாகப் பயன்படுத்தப்படக்கூடாது.

லஞ்சம், மிரட்டல், போலி வாக்காளர்கள், வாக்குச்சாவடிகளுக்கு அருகில் பிரச்சாரம் செய்வது போன்ற சட்டவிரோத செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

தலைமைச் செயலகத்தில் படங்கள் அகற்றம்
தலைமைச் செயலகத்தில் படங்கள் அகற்றம்

கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் குறித்து அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். ஒலிபெருக்கி அல்லது கூட்டங்களுக்கான அனுமதி பெற வேண்டும். அமைதியைப் பேணுவதற்கும் போக்குவரத்தை நிர்வகிப்பதற்கும் காவல்துறை அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

வாக்காளர்களை செல்வாக்கு செலுத்தக்கூடிய நிதி உதவிகள், புதிய திட்டங்கள், உள்கட்டமைப்பு உறுதிமொழிகள் அல்லது தற்காலிக நியமனங்கள் போன்ற அறிவிப்புகள் வெளியிடக்கூடாது.

அரசு வாகனங்கள், விடுதிகள், டாக் பங்களாக்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட அரசு வசதிகள் அனைத்து கட்சிகளுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும்.

Assembly Elections: தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!- முழு விவரம்

தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகளும் கூட்டணிகளை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா என நான்கு மாநிலங்கள், புதுச்... மேலும் பார்க்க

“உளவுத் துறையைக் கையாளப் போகும் முதல் பெண் டி.ஜி.பி”- அதிரடி மாற்றங்களைக் கையில் எடுத்த அரசு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்துவந்த குற்றசெயல்களும், அதை தொடர்ந்து எழுந்த புகார்களும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கு தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்கிற கேள்வி... மேலும் பார்க்க

எரியும் மேற்கு ஆசியா; தத்தளிக்கும் MSME-கள்: 'Tax Holiday நிச்சயம் தேவை'- எம்.எல்.ஏ எழிலன் கோரிக்கை!

மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, இந்தியாவின் MSME (குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்) துறை உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

'6 தொகுதிகள் கொடுத்தே ஆகணும்' - கறார் காட்டும் கம்யூனிஸ்டுகள்; கைவிரித்த திமுக!

கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தி.மு.க-வின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடிக்கிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக செல்லவில்லை எனவும் தி.மு.க இறங்கி வர மறுக்கிறது என குமுறுகிறார்கள் தோழர்கள்.... மேலும் பார்க்க

இனி 'இந்த' நிலம், வீடு பத்திரப் பதிவுகளுக்கு பான் கார்டு தேவையில்லை!

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. இதில் வீடு அல்லது மனைப் பத்திரப்பதிவில் மத்திய அரசு விதிகளைச் சற்று எளிதாக்கி உள்ளது. இதுவரை, வீடு அல்லது மனையை ரூ.10 லட்சத்... மேலும் பார்க்க

'நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறும் வேல்முருகன்!' - கூடுதல் தொகுதி கிடைக்குமா? த.வா.க ப்ளான் என்ன?

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தனது கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறத் தொடங்கியிருக்கிறார். த.வா.க-வுக்கு ஒதுக்கும் 1 தொகுதியில் வேல்முருகனே களமிறங்குவார் எனச் சொல்லப்பட்ட சூழலில் 'த.... மேலும் பார்க்க