செய்திகள் :

கோவை: "திமுக ஆட்சியின் அவலநிலை" - பெண் காவலர்களுக்கு பாலியல் வன்கொடுமை; காவல்துறை உயர் அதிகாரி கைது

post image

கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு 4-வது பட்டாலியன் படைப் பிரிவு இயங்கி வருகிறது. இதில் கமாண்டாக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர் அங்கு பணியாற்றி வந்த பெண் போலீஸார் மற்றும் பெண் ஊழியர்கள் பலருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி, அநாகரீகமாகப் பேசி வந்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட பெண் போலீஸார் செந்தில்குமார் குறித்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது.

பாலியல் வன்முறை
பாலியல் வன்முறை

அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் செந்தில் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் போத்தனூரில் உள்ள கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் போலீஸார், செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரித்தனர். அதில் செந்தில்குமார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதியானது.

செந்தில்குமார்
செந்தில்குமார்

இதையடுத்து பாலியல் வன்கொடுமை, மிரட்டல், தாக்குதல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் செந்தில்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, காவல்துறையினர் செந்தில்குமாரை நேற்று இரவு கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பெண் காவலரே பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதும், காவல்துறை அதிகாரியே இதனைச் செய்திருப்பதும், திமுக ஆட்சியில் தமிழகம் எத்தனை அவலநிலையில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை" என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 5 நாள்களாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸார்; பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ். விவசாயியான இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இளையமகள், குறுக்குச்சாலையில் உள்ள அரசு மேல்நி... மேலும் பார்க்க

புதுச்சேரி: திருமணத்தை மறுத்த காதலி; பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர காதலன்! - அதிர வைக்கும் பின்னணி

புதுச்சேரி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் காவ்யா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), அண்ணா சாலையிலுள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவரும், இந்திரா நகரைச் சேர்ந்த ஓட்டுநர் ஜோசப் என்பவரும் ஒருவரைய... மேலும் பார்க்க

மண்டபத்தில் கைதான கேங்க்ஸ்டர்; `திருமணம் முடியும்வரை விடுங்கள்' - போலீஸாரிடம் கதறி அழுத மணமகள்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஆகாஷ் என்பவருக்கு திருமணம் முடிவாகி இருந்தது. இதற்காக திருமண மண்டபத்திற்கு உறவினர்கள் வந்து குவிந்து இருந்தனர். மணமகன் மணக்கோலத்தில் இருந்தார். அந்நேரம் திடீரென போலீஸ் வ... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்கள் அடித்துக் கொண்டதில் எட்டாம் வகுப்பு மாணவன் பலி - துறையூர் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த புலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நல்ல வண்னிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். விவசாயியான இவரது மகன் செல்வம் (வயது:13). இவர், கரட்டாம்பட்டியில் உள்ள அரசு மேல்நி... மேலும் பார்க்க

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு; ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை - கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன். பொறியியல் பட்டதாரியான இவர், பக்கத்து ஊரில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர்களைக் கொலைசெய்ய முயன்றதாகக் கூறி, மான... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனையில் டாக்டர்போல நடித்து தங்க நகைகள், செல்போன் திருட்டு - கூட்டாளிகள் கைது!

சென்னை, கொளத்தூரைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவரின் மாமியாருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் மாமியாரை அழைத்துக் கொண்டு காஞ்சனா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்தார். காஞ்சனாவின் ம... மேலும் பார்க்க