செய்திகள் :

பள்ளி மாணவர்கள் அடித்துக் கொண்டதில் எட்டாம் வகுப்பு மாணவன் பலி - துறையூர் அதிர்ச்சி

post image

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த புலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நல்ல வண்னிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். விவசாயியான இவரது மகன் செல்வம் (வயது:13). இவர், கரட்டாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரது மகன் பாரதி (வயது: 15). இவர், நடுவலூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை மாணவர்கள் தங்கள் வீட்டு பகுதியில் வாலிபால் விளையாடியதாக தெரிகிறது. அப்பொழுது, பந்து செல்வம் தலையில் பட்டுள்ளது. இதில், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துள்ளனர்.

uravinarkal

சற்று நேரத்தில் செல்வம் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டிற்கு சென்ற செல்வத்திற்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, பெற்றோர்கள் செல்வத்தை துறையூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் செல்வம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த புலிவலம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து செல்வம் இறந்ததற்கான காரணம் என்ன, ஒன்பதாம் வகுப்பு மாணவன் பாரதி அடித்ததால் தான் இறந்தானா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம், அபபகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு; ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை - கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன். பொறியியல் பட்டதாரியான இவர், பக்கத்து ஊரில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர்களைக் கொலைசெய்ய முயன்றதாகக் கூறி, மான... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனையில் டாக்டர்போல நடித்து தங்க நகைகள், செல்போன் திருட்டு - கூட்டாளிகள் கைது!

சென்னை, கொளத்தூரைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவரின் மாமியாருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் மாமியாரை அழைத்துக் கொண்டு காஞ்சனா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்தார். காஞ்சனாவின் ம... மேலும் பார்க்க

நெல்லை: `மனைவி மீது சந்தேகம்' - தலையைத் துண்டித்து சாலையில் வைத்த கொடூர கணவன்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பட்டன். கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி சுதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுதாவின் நடத்தையில் முத்துப்... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபரை நம்பவைத்து ரூ.30 லட்சம் பறிப்பு; பட்டதாரிகள் போலீஸில் சிக்கிய பின்னணி!

சென்னை வேளச்சேரி, காந்தி நகரில் வசித்து வருபவர் உத்தம்சன் (65). இவர் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரின் சொந்த மாநிலம் ராஜஸ்தான். ஜவுளி வியாபாரத்தோடு பழைய தங்க நகைகளை வாங்கும் பிசினஸிலும் ஈடுபட்டு வருக... மேலும் பார்க்க

விருதுநகர்: மாயமான மூதாட்டி; அழைத்துச் சென்ற தாய், மகள் - நகைக்காக கொல்லப்பட்ட கொடூரம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்,மனைவி அம்பிகா (வயது 62). இவர் கடந்த மார்ச் 8-ம் தேதி, காரியாபட்டி அருகேயுள்ள சித்து மூன்றடைப்பு கிராமத்திற்கு... மேலும் பார்க்க

'பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை' - 57 வயது ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரும் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 100- க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நில... மேலும் பார்க்க