செய்திகள் :

மோனலிசா போஸ்லேவுக்கு 18 வயது பூர்த்தி ஆகும் முன்பே திருமணம் நடந்ததா? விவாதத்துக்கு காரணம் என்ன?

post image

பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் ருத்ராட்சம் மற்றும் மாலைகள் விற்பனை செய்துகொண்டிருந்த மோனலிசா போஸ்லே புகைப்படம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து புகழ்பெற்றார். பின்னர் சினிமா வாய்ப்புகளும் வந்தன. மலையாள சினிமா உள்ளிட்ட பலமொழி சினிமாக்களில் நடித்தும் வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லேவும்,  மகாராஷ்டிராவைச் சேர்ந்த முஹம்மது ஃபர்மானும் காதலித்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இஸ்லாமியரான முஹம்மது ஃபர்மானை திருமணம் செய்துகொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்கள் குல வழக்கப்படி வேறு கிராமத்தில் பெண்ணை திருமணம் செய்துகொடுப்பதில்லை என அவரது தந்தை தெரிவித்திருந்தார். தம்பானூர் காவல் நிலையத்தில் மோனலிசாவும் முஹம்மது ஃபர்மானும் தஞ்சம் அடைந்து புகார் அளித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிப்பட்டது.

மோனலிசா போஸ்லே - முஹம்மது ஃபர்மான் திருமணத்தில் கேரள அமைச்சர் சிவன்குட்டி மற்றும் சி.பி.எம் நிர்வாகிகள்

இவர்களது திருமணத்தில் சி.பி.எம் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கேரள அமைச்சர் சிவன்குட்டி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதற்கிடையே மோனலிசா போஸ்லேவுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை, அதையும் மீறி திருமணம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது. பிரயாக்ராஜில் அவர் அளித்த பேட்டி உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி இந்த விவாரத்தை எழுப்பினர். சிலர் 'திருமணம் செய்து வைக்க இடதுசாரியினரை அணுகவும்' என்ற ரீதியிலும் கருத்துகளை பகிர்ந்தனர்.

மோனலிசா போஸ்லே- முகம்மது ஃபர்மான்
மோனலிசா போஸ்லே- முகம்மது ஃபர்மான்

ஆனால், மோனலிசா போஸ்லே 2008-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பிறந்ததாக தெரியவந்துள்ளது. எனவே அவருக்கு 18 வயதும் 2 மாதங்களும் ஆகிவிட்டதாக தெரியவந்துள்ளது. அவர்களது திருமணம் கேரளா திருமணச்சட்டத்தின்படி கே ஸ்மார்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணம் சான்றிதழை சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததைத் தொடர்ந்து இந்த விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.

எல்.பி.ஜி கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்த ஆட்டோ ஓட்டுனர்கள்! - திருச்சி நிலவரம்

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய போரின் காரணமாக அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஹர்முஸ் நீர்வழிப்பாதையை மூடி உள்ளது. இதனால், உலகம் ... மேலும் பார்க்க

"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது; எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்!" - ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது. எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் என்பது நாடறிந்த உண்மை. தி.மு.க ரஜினிகாந்தை மிரட்டியதாக கூ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பதவிக்கு வேட்டு! - `டெண்டர் முதல் இன்ஸ்டா வரை...' - வெடித்துக் கிளம்பிய விவகாரம்!

தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது தி.மு.க தலைமை. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்துள்ளது. பெண்... மேலும் பார்க்க

ஆதவ் டேபிள் ஃபேன்; ஆனந்த் எலெக்ட்ரிக் குக்கர்! - போட்டி போட்டு பரிசுப் பொருட்களை இறக்கும் தவெக-வினர்

தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் உறுதி செய்திருக்கும் நிலையில், சென்னைக்குள் போட்டி போடும் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் ஆதவ் அர்ஜூனாவும் போட்டிப் போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு... மேலும் பார்க்க

ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் - என்ன காரணம்?

ஈரான் மீது போர் தொடுத்தது என்னவோ அமெரிக்காவும், இஸ்ரேலும் தான். ஆனால், ஈரான் வளைகுடா நாடுகளையும் சேர்த்துக் குறி வைக்கின்றது. 'அமெரிக்காவை எங்களால் நேரடியாகத் தாக்க முடியாது. அதனால், வளைகுடா நாடுகளில்... மேலும் பார்க்க

'கூட்டணிக்கு போகலாமா?'- அவசர மா.செக்கள் மீட்டிங்கில் ஆனந்த் கேட்ட கேள்வி; ட்விஸ்ட் கொடுக்கும் விஜய்?

தவெக சார்பில் திடீரென அவசர அவசரமாக கூட்டப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த், 'நாம் கூட்டணிக்கு போகலாமா? உங்களுடைய விருப்பம் என்ன?' என நிர்வாகிகள் மத்தியில் கேட்டது அரசியல் வட... மேலும் பார்க்க