செய்திகள் :

பாஜக-வில் இணைந்த பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயாஸ் - மே.வங்க தேர்தலில் போட்டியா?!

post image

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலோடு சேர்ந்து மொத்தம் 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பரபரப்பான சூழலில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரான லியாண்டர் பயாஸ் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார்.

அவர் இன்று டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் கிரண் மற்றும் சுகந்தா ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

லியாண்டர் பயாஸ்

கட்சியில் சேர்ந்த பிறகு லியாண்டர் பயாஸ் அளித்த பேட்டியில், “நாட்டின் இளைஞர்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணம் எனது வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வாய்ப்பிற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியில் சேர்ந்தது ஒரு உறுப்பினராக மட்டுமல்லாமல் தேசத்திற்கு சேவை செய்யும் முக்கிய பொறுப்பு இருப்பதால் சேர்ந்துள்ளேன். நான் மேற்கு வங்கத்தில் பிறந்து, பெங்காலி பாரம்பர்யத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.

லியாண்டர் பயாஸ் தாயார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஆவார். சமீபத்தில் பா.ஜ.க தலைவர் நிதின் நபினை கொல்கத்தாவில் லியாண்டர் பயாஸ் சந்தித்துப் பேசினார். அதனை தொடர்ந்து பயாஸ் பா.ஜ.க-வில் சேர்ந்து இருக்கிறார். அவருக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க

`எங்களுக்குத் தேவை நீதியே தவிர வெறுப்பு அல்ல' - பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரானில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து இன்றுடன் (ஏப்ரல் 22) ஓராண்டு நிறைவடைகிறது. 26 ஆண்களின் உயிரைப் பறித்த இந்... மேலும் பார்க்க