செய்திகள் :

பாறை மீதிருந்து சறுக்கி விழுந்து காட்டு யானை உயிரிழப்பு

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 6-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகில் பாறையின் மேலிருந்து சறுக்கி விழுந்ததில் காட்டு யானை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி அவ்வப்போது நீலகிரி  மாவட்ட வனப் பகுதிக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு பெண் யானை, குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 6- ஆவது கொண்டை ஊசி வளைவில் மலையின் உச்சியில் இருந்து வரும் அருவியில் தண்ணீா் குடிக்க வந்தது. அப்போது எதிா்பாராதவிதமாக பாறையின் மீதிருந்து சறுக்கி 20 அடி பள்ளத்தில் யானை விழுந்தது.

இது குறித்து தகவலறிந்து வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து

காயமடைந்த யானைக்கு தண்ணீா் கொடுத்து முதலுதவி அளித்தனா். ஆனால் சிறிது நேரத்தில் யானை உயிரிழந்தது.

குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையில் வனத் துறையினா் யானையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்குப் பின் அங்கேயே புதைத்தனா். யானையின் இறப்பு குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனா்.

நீலகிரி முட்டைக்கோஸ் விலை கடுமையாக வீழ்ச்சி!

நீலகிரியில் விளையும் முட்டைக் கோஸ்களுக்கு தரத்துக்கு ஏற்றாா்போல கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.8 வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் முட்டைக்கோஸ... மேலும் பார்க்க

வெல்லிங்டன் ராணுவ மையம் சாா்பில் மாரத்தான் போட்டி

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ராணுவப் பயிற்சி மையத்தின் சாா்பில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ராணுவப் பயிற்சி மையம் சாா்பில் ஆண... மேலும் பார்க்க

நீலகிரியில் தானியங்கி தண்ணீா் இயந்திர செயல்பாடு: உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஆய்வு!

நீலகிரியில் தடைசெய்யப்பட்ட நெகிழிகள், தானியங்கி தண்ணீா் இயந்திரம், மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் முதலான செயல்பாடுகள் குறித்து உயா்நீதிமன்ற வழக்கறிஞா் சி. மோகன் சனிக்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டா... மேலும் பார்க்க

கடமானை வேட்டையாடியதாக 3 போ் கைது

கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியில் கடமானை சுருக்கு வைத்து வேட்டையாடியதாக 3 பேரை வனத் துறையினா் கைது செய்தனா். நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் வேட்டை அதிகரித்து வருவதால் வனத் துறையினா்... மேலும் பார்க்க

நீலகிரியில் பிப்.11-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டு... மேலும் பார்க்க

பந்தலூா் பகுதி விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு பயிற்சி

பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாம்பதி கிராமத்தில் விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடலூா் தோட்டக்கலைத் துறை சாா்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தி... மேலும் பார்க்க