செய்திகள் :

'பிள்ளை பிடிப்பவர்களிடம் கவனமாக இருங்கள்..!' - நீலகிரி அதிமுக மா.செ சூட்சும அறிக்கை

post image

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலர் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க- வில் இணைந்து வருகின்றனர். எஸ்.பி.வேலுமணி அணிக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில், அ.தி.மு.க நீலகிரி மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத்தின் பதவி பறிக்கப்பட்டு, புதிய மாவட்டச் செயலாளராக பால. நந்தகுமார் பதவி வகித்து வருகிறார். அ.தி.மு.க- வில் இருந்து த.வெ.க-வில் இணையும் நிர்வாகிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் மா.செ பால. நந்தகுமார், 'பிள்ளை பிடிப்பவர்களிடம் கவனமாக இருங்கள்' என சூட்சம அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தொண்டர்களுடன் பால. நந்தகுமார்

அதில் பால. நந்தகுமார், "நீலகிரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல ஆண்டுகளாக, பல்வேறு பதவிகளில் இருந்து, பதவி சுகத்தை அனுபவித்து, தங்களை வளப்படுத்திக் கொண்டு, அவர்களை நம்பி வந்த எளிய தொண்டர்களையும், பல்வேறு நிர்வாகிகளையும் நட்டாற்றில் நிறுத்திவிட்டு, கழகத்திற்கும், தங்களை நம்பி வந்தவர்களுக்கும், பெரும் துரோகத்தை இழைத்து விட்டு, இன்று தங்கள் சுய மரியாதையை அடகு வைத்து, பொய்க்கால் குதிரையின் கட்சியில் இணைந்து எப்படியாவது, ஏதாவது ஒரு பதவியை பெற்று தங்கள் வயிற்றை வளர்த்து கொள்ளலாம் என்று பகல் கனவு காண்கின்ற பச்சை துரோகிகள் சிலர் கழகத்தின் உண்மையான சில தொண்டர்களையும், சில நிர்வாகிகளையும், மூளை சலவை செய்து பொய்க்கால் குதிரையினுடைய கட்சியில் சேர்ந்தால் உங்களுக்கும் பதவி வாங்கித் தருகிறோம் என்று ஏமாற்றி அழைப்பு, விடுகிறார்கள். அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மை தொண்டர்கள் செவி சாய்ப்பதில்லை. எனினும், இந்த பிள்ளை பிடிக்கும் கும்பலிடம் கழகத்தின் விசுவாசிகள், உண்மை தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கழகம் வெல்லும்.... நாளை நமதே... புரட்சித்தலைவரின் புகழ்பெற்ற பாடல் ஒன்றை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்... ' சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார். எதிர்காலம் வரும் நம் கடமை வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்போம். பொது நீதியிலே புது பாதையிலே வரும் நல்லோர் முகத்திலே விழிப்போம்' " எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். மாவட்டச் செயலாளர் பால. நந்தகுமாரின் இந்த அறிக்கை த.வெ.க- வில் இணைந்த அ.தி.மு.க நிர்வாகிகளை கொதிப்படையச் செய்திருக்கிறது.

`கோவைக்கு மெட்ரோ, எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது; அதற்கான நடவடிக்கைகள்...'- அமைச்சர் சம்பத்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ கட்டமைப்புகள், மருந்து கையிருப்பு, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நிலை, நோயாளிகளு... மேலும் பார்க்க

'பழைய பதவியை பயன்படுத்தக்கூடாது'- எடப்பாடி போட்ட கண்டிஷன்; மீண்டும் அதிமுகவில் பிளவை உண்டாக்குமா?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்பாராத சரிவைச் சந்தித்து, 47 இடங்களுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சிக்குள் கடுமையான உட்கட்சிப் பூசல்களு... மேலும் பார்க்க

சர்ச், பள்ளி, டாஸ்மாக் மூணும் அடுத்தடுத்து.! 'எப்ப சார் கடையை மூடுவீங்க?' கேட்பது பெரம்பூர் மக்கள்!

``பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் 717 மதுபானக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூடப்படும்" என தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதும் விஜய் அதிரடி உத்தரவு பிற... மேலும் பார்க்க

"மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் பொறுப்பின்றி பேசுகிறார்"- அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார்

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு வரவேண்டிய நீரின் அளவு பெருமளவு குறையும். இதனால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆனால் கர்நா... மேலும் பார்க்க

பக்ரீத்: ``உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை.!" - நீதிமன்ற உத்தரவு குறித்து ஜவாஹிருல்லா

இந்திய மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் கே. சூர்யா பிரசாந்த் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், தமிழக அரசின் 1976-ஆம் ஆண்டு அரசாணைக்கு முழு சட்ட அங்கீகாரம் அளித்தார். இதன்மூல... மேலும் பார்க்க