செய்திகள் :

புதுச்சேரி: அதிர வைக்கும் போலிமருந்து மோசடி; மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சிக்குவார்களா?

post image

இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனங்களான `சன் ஃபார்மா' மற்றும் `டாக்டர் ரெட்டிஸ்' பெயரில், இந்தியா முழுவதும் போலி மருந்துகளை சப்ளைச் செய்த கும்பலை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர்.

அந்தப் போலி மருந்து தொழிற்சாலைகளுக்கும் அவற்றின் குடோன்களுக்கும் சீல் வைத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், முக்கிய குற்றவாளியான சிவகங்கையைச் சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் உள்ளிட்ட 26 பேரைக் கைது செய்தனர்.

அதையடுத்து இந்த மோசடிக் கும்பலுடன் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அரசு அதிகாரிகள் என அனைவரும் தொடர்பில் இருந்ததால், 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT - Special Investigation Team) அமைத்து உத்தரவிட்டார் ஆளுநர் கைலாஷ்நாதன்.

போலி மருந்து தொழிற்சாலை
போலி மருந்து தொழிற்சாலை

அதையடுத்து போலி மருந்துக்கும்பலுக்கு ஜி.எஸ்.டி மோசடியில் உடந்தையாக இருந்த முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

அதேசமயம், காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு அளித்தன. ஆனால், `புதுச்சேரி காவல்துறையின் எஸ்.ஐ.டியே விசாரிக்கட்டும்' என்று உறுதியாக அவற்றை நிராகரித்த கவர்னர், அதன்பிறகு வழக்கை சி.பி.ஐ மற்றும் என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றினார்.

இதற்கிடையில் போலியாகத் தயாரிக்கப்பட்ட 34 மருந்து நிறுவனங்களின் மருந்துகளை விற்பதற்குத் தடை விதித்து, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை மருந்தகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

இந்த நிலையில்தான் மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று, ஒருசில மருத்துவர்கள் சி.பி.ஐ-க்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய இந்திரா காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர், ``மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் போலி மருந்து உற்பத்தி நடைபெற்றிருக்க வாய்ப்புகளே இல்லை.

சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை, சில ஆண்டுகளுக்கு முன்பு தனித் துறையாக மாறிவிட்டது. அப்போதில் இருந்தே அங்கு எதுவும் சரியாக நடப்பதில்லை.

சிபிஐ
சிபிஐ

மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகள் தரமானதா, போலியாக மருந்துகள் விற்கப்படுகிறதா, காலாவதியான மருந்துகள் இருக்கிறதா என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள்தான் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆனால் அவர்கள் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை. அதனால் அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள், வாங்கிய சொத்துகளின் விவரங்களைக் கணக்கிட வேண்டும்.

அத்துடன் போலி மருந்து மோசடியில் முக்கிய குற்றவாளிகள், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளிடம் செல்போனில் பேசிய விவரங்களையும் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும்" என்றனர்.

" தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது!"- காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. விசில் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள த... மேலும் பார்க்க

`ஆரம்பிக்கலாங்களா..!' - கோவையில் வேலுமணி கேம் ஸ்டார்ட் - செந்தில் பாலாஜி ஷாக்!

தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். கோவை மாவட்டம் அதிமுகவின் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்தமுறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக தீவிரமா... மேலும் பார்க்க

"அவருக்கு கோபம், மனக்கசப்புகள் இருந்தாலும்கூட..!"- டிடிவி NDA கூட்டணியில் இணைந்தது குறித்து அண்ணாமலை

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (ஜன.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்."அண்ணன் டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்... மேலும் பார்க்க

`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்!

நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ர... மேலும் பார்க்க

`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' - எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி... மேலும் பார்க்க