செய்திகள் :

புதுச்சேரி: ``உங்களால நிறைய பேர் இறந்தாங்க" - த.வெ.க நிர்வாகியை எச்சரித்த காவல்துறை பெண் அதிகாரி

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த அக்டோபரில் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பிறகு வெளியில் பரப்புரை, சுற்றுப்பயணம், பிரசாரம் என எதையும் அவர் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், கரூர் சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குப் பிறகு இன்று புதுச்சேரியில் மக்களைச் சந்திக்கிறார்.

த.வெ.க - விஜய்
த.வெ.க - விஜய்

முன்னதாக த.வெ.க தரப்பில் இதற்கு அனுமதி கோரியபோது விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும், 5,000 பேர் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில், விஜய்யின் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் போதிய அளவில் கூட்டம் சேராததால், QR-CODE அனுமதிச் சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்ககோரி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட த.வெ.க நிர்வாகிகள் காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி - முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்
புதுச்சேரி - முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்

அப்போது ஆத்திரமடைந்த ஈஷா சிங் த.வெ.க நிர்வாகியிடம், ``உங்களால நிறைய பேர் உயிரிழந்திருக்காங்க. யாரேனும் உயிர் இழந்தால் நாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம்" எச்சரித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

"திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்... மேலும் பார்க்க

"டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் த... மேலும் பார்க்க

`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழனிசாமி?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதிமுகவில் தங்களை இணைக்க ஓ.பி.எஸ் டிசம்பர... மேலும் பார்க்க

அதிமுக: "கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!"- சி.வி சண்முகம்

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், " அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வ... மேலும் பார்க்க