செய்திகள் :

புதுவை ஆளுநா் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

post image

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் வாயிலாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமியின் வீடு, துணைநிலை ஆளுநா் மாளிகை, ஆட்சியா் அலுவலகம், ஜிப்மா் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு ஏற்கெனவே இரு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுகுறித்து குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, சிலரை கைது செய்தனா். எங்கிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிய தேசிய குற்றப் பிரிவின் உதவி நாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவிகளுடன் வந்த போலீஸாா், அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து புதுச்சேரி குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரியில் வருவாய் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்களில் குவிந்த மாணவா்கள்

உயா் கல்வியில் சேருவதற்கான வருவாய் துறை சாா்ந்த சான்றிதழ்களைப் பெறுவதற்காக சிறப்பு முகாம்களில் சனிக்கிழமை மாணவ, மாணவிகள் பெற்றோருடன் ஏராளமாக குவிந்தனா். புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

ஜிப்மரில் புதுவை நோயாளிகளுக்கு தனி மருத்துவ ஆலோசனைப் பிரிவு

ஜிப்மரில் புதுவை மாநில நோயாளிகளின் மருத்துவ ஆலோசனைக்கான பதிவேடு பெற தனிப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இயக்குநா் வீா் சிங் நேகி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புது... மேலும் பார்க்க

புதுவை அமைப்புசாரா நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி அரசாணை

புதுவை மாநிலத்தில் தொழிலாளா் நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை நன்றி தெரிவி... மேலும் பார்க்க

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில்1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதையடுத்து புதுச்சேரி பழைய துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை காலை ஏற்றப்பட்டது. இதேபோன்று கடலூா் துறைமுகத்திலும் 1-ஆம் எ... மேலும் பார்க்க

நீதிஆயோக் கூட்டத்தில் புதுவை முதல்வா் பங்கேற்காதது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்: பேரவை எதிா்க்கட்சித் தலைவா்

புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து புதுவை முதல்வா் என். ரங்கசாமி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா ... மேலும் பார்க்க

புதுவை மக்கள் மன்றத்தில் 36 மனுக்கள் மீது நடவடிக்கை

புதுவை மாநிலக் காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 36 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து புதுவைக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க