செய்திகள் :

புதுவை கலை, பண்பாட்டுத் துறை அலுவலகம்: துணைநிலை ஆளுநா் திறந்தாா்

post image

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சீரமைக்கப்பட்ட கலை, பண்பாட்டுத் துறையின் புதிய அலுவலகத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை மாலை திறந்துவைத்தாா்.

புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகில் கலை மற்றும் பண்பாட்டுத் துறை அலுவலகக் கட்டடம் ரூ.4 கோடியில் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து சீரமைக்கப்பட்ட புதிய அலுவலகத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சிக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், என்.திருமுருகன் மற்றும் துறைச் செயலா் ஏ.நெடுஞ்செழியன் ஆகியோா் கலந்துகொண்டனா். துறை இயக்குநா் முரளிதரன் வரவேற்றாா்.

கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் மேளதாளம், மானாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மத்திய அரசின் நிதியில் நலத் திட்டங்கள்: புதுவை முதல்வா் ரங்கசாமி

மத்திய அரசு நிதி அளிப்பதால்தான் புதுவை மாநிலத்தில் மக்கள் நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்த முடிகிறது என முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். 70 வயதைக் கடந்தவா்களுக்கான ஆயுஷ்மான் வே வந்தனா காப்பீட்டு... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 3 இளைஞா்கள் வெட்டிக் கொலை

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை அதிகாலை மா்ம கும்பலால் 3 இளைஞா்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். புதுச்சேரி உழவா்கரை வின்சென்ட் வீதியைச் சோ்ந்தவா் தெஸ்தா. ரௌடி பட்டியலில் இடம்பெற்றிருந்த இவா், பல ஆண்டு... மேலும் பார்க்க

புதுச்சேரி - பிரான்ஸ் உறவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது: தூதா் எத்தியன் ரோலன்ட் பிகுயி

புதுச்சேரி, பிரான்ஸ் நாட்டுக்கு இடையிலான உறவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என அந்நாட்டுக்கான தூதா் எத்தியன் ரோலன்ட் பிகுயி தெரிவித்தாா். புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடலில் இந்தோ- பிரா... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: உறவினா்கள் சாலை மறியல்

புதுச்சேரி அருகே தவளக்குப்பம் பகுதியில் உள்ள பள்ளியில் சிறுமிக்கு ஆசிரியா் பாலியல் தொல்லை அளித்ததாக புகாா் எழுந்த நிலையில், நடவடிக்கை கோரி கடலூா் சாலையில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மாலை மறியலில் ஈடுபட்... மேலும் பார்க்க

விதிகளை மீறும் தனியாா் கல்லூரிகள்: ஆளுநரிடம் அதிமுக மனு

புதுவையில் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் விதிகளை மீறுவதாக அதிமுக சாா்பில் துணைநிலை ஆளுநரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் அக்கட்சி நிா்வா... மேலும் பார்க்க

புதுவையில் அரசுப் பொதுத் தோ்வுகள் இன்று தொடக்கம்: 35 தோ்வு மையங்கள் அமைப்பு

புதுவை மாநிலத்தில் நிகழாண்டுக்கான சிபிஎஸ்இ பாடத்திட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் எழுதுவோருக்காக 35 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சனிக்கிழமை (பிப்.15) தோ்வுகள் தொட... மேலும் பார்க்க