செய்திகள் :

புனேயில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி! மகாராஷ்டிரா வில் அதிர்ச்சி

post image

மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் சிஞ்ச்வாட் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வந்தனர். நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தால் 8 பேர் உயிரிழந்தனர். நேற்று மேலும் 7 பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்கள். புனேவின் ஹடாப்சர் பகுதியில் ஐந்து நபர்களும், பிம்ப்ரி-சிஞ்ச்வாட்டின் புகேவாடியில் பத்து பேரும் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் பலர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில்,''இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். இது தொடர்பாக எட்டு பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சிலரும் கைது செய்யப்படலாம். இதன் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். இது எவ்வாறு நடந்தது என்பது குறித்து . காவல்துறை கலால் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் இருக்கும் நபரை கண்டறிந்து அவர்களை முழுமையாக கைது செய்வோம். இது மெத்தனால் போன்ற ஒரு பொருளைப் பயன்படுத்தி கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

மாநில கலால் ஆணையர் அதுல் கனாடே இது குறித்து கூறுகையில், "புகேவாடி மற்றும் ஹடாப்சர் ஆகிய இரு பகுதிக்கும் மதுபானம் சப்ளை செய்த யோகேஷ் வான்கடேயை நாங்கள் கைது செய்தோம். அவர் பிம்ப்ரி சின்ச்வாட் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்'' என்று கூறினார். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக... மேலும் பார்க்க

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத்... மேலும் பார்க்க