செய்திகள் :

புனேயில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி! மகாராஷ்டிரா வில் அதிர்ச்சி

post image

மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் சிஞ்ச்வாட் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வந்தனர். நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தால் 8 பேர் உயிரிழந்தனர். நேற்று மேலும் 7 பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்கள். புனேவின் ஹடாப்சர் பகுதியில் ஐந்து நபர்களும், பிம்ப்ரி-சிஞ்ச்வாட்டின் புகேவாடியில் பத்து பேரும் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் பலர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில்,''இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். இது தொடர்பாக எட்டு பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சிலரும் கைது செய்யப்படலாம். இதன் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். இது எவ்வாறு நடந்தது என்பது குறித்து . காவல்துறை கலால் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் இருக்கும் நபரை கண்டறிந்து அவர்களை முழுமையாக கைது செய்வோம். இது மெத்தனால் போன்ற ஒரு பொருளைப் பயன்படுத்தி கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

மாநில கலால் ஆணையர் அதுல் கனாடே இது குறித்து கூறுகையில், "புகேவாடி மற்றும் ஹடாப்சர் ஆகிய இரு பகுதிக்கும் மதுபானம் சப்ளை செய்த யோகேஷ் வான்கடேயை நாங்கள் கைது செய்தோம். அவர் பிம்ப்ரி சின்ச்வாட் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்'' என்று கூறினார். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

திருமண வீட்டில் பயங்கரம்!முகமூடி கும்பல் அரிவாள் வெறியாட்டம் – 6 பேர் படுகாயம்; 4 பேர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ரத்த வெள்ளமாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த மர்மக் கும்பல் ஒன்று சினிமாப் படக் காட்சியை... மேலும் பார்க்க

சென்னை: சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்!

வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் வேலப்பன் என்பவர், சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க

திருவள்ளூர்: குடிக்கத் தண்ணீர் கேட்ட வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை - மூவரிடம் போலீஸ் விசாரணை!

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் பகுதியில் உள்ள ராமராஜன் கண்டிகை கிராமத்தில் பெண் ஒருவர் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் வீட்டின் வெளிபக்க இரும்பு கேட்டை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்... மேலும் பார்க்க

கணவர், அவரின் 2-வது மனைவி உட்பட 4 பேரை கொன்று எரித்த பெண்; கதறி அழுது நாடகம்... சிக்கியது எப்படி?!

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் அருகில் உள்ள ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தில் வசித்தவர் ராம் சிங் செளதரி. முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம் சிங் 2005ம் ஆண்டு சுனிதா என்பவரை திருமணம் செய்தார். இத்திருமணத்தின் ம... மேலும் பார்க்க

கன்னியாகுமரி சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: காவலர் கைது; விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவன், கடந்த 25-ம் தேதி தன் பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தன் மாமா வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவ... மேலும் பார்க்க

சென்னை: மூதாட்டிக்கு நடந்த கொடூரம் - கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பீகார் இளைஞர்கள்!

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டவர். அதனால் அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிடுவார். அதைப் போல சம்பவத்தன்றும் மூதாட்டி அதிகாலை நேரத்தில் வீட்ட... மேலும் பார்க்க