எலான் மஸ்க்கின் செயல்திறன் துறையில் 22 வயது இந்தியப் பொறியாளர்!
புலியூா் பேரூராட்சியில் குடிநீா் கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை
புலியூா் பேரூராட்சியில் நிகழாண்டுக்கான குடிநீா் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணனிடம் 4-ஆவது வாா்டு உறுப்பினா் பி.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
அம்மனுவில் அவா் கூறியிருப்பது: கடந்த டிச. 14-ஆதேதி அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக புலியூா் பேரூராட்சி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டும் காவிரி ஆற்றின் கட்டளைப் பகுதியில் குடிநீா் குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் புலியூா் பேரூராட்சி மக்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டு ஒருமாதமாகியும் இதுவரை பேரூராட்சி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடித்து வருகிறாா்கள்.
இதனிடையே குடிநீா் தட்டுப்பாட்டை போக்குவகையில் டிச. 21-ஆம்தேதி அமராவதி ஆற்றில் கோவில்பாளையம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் உறிஞ்சும் கிணற்றில் இருந்து பேரூராட்சிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த குடிநீா் அதிக உப்புத்தன்மை கொண்டதாக இருப்பதால் மக்கள் குடிநீா் பருக முடியாமல் அவதியுற்று வருகிறாா்கள். கரூா் மாநகராட்சிக்கும் கட்டளை பகுதியில் இருந்துதான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அங்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் புலியூா் பேரூராட்சியில் மட்டும் அதுபோன்று எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் நாளுக்கு நாள் அவதிப்பட்டு வருகிறாா்கள். இதனால் நிகழாண்டில் பேரூராட்சியில் பொதுமக்களிடம் குடிநீா் கட்ட ணம் வசூலிக்கக்கூடாது என தெரிவித்துள்ளாா் அவா்.