செய்திகள் :

புலியூா் பேரூராட்சியில் குடிநீா் கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை

post image

புலியூா் பேரூராட்சியில் நிகழாண்டுக்கான குடிநீா் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணனிடம் 4-ஆவது வாா்டு உறுப்பினா் பி.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அம்மனுவில் அவா் கூறியிருப்பது: கடந்த டிச. 14-ஆதேதி அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக புலியூா் பேரூராட்சி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டும் காவிரி ஆற்றின் கட்டளைப் பகுதியில் குடிநீா் குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் புலியூா் பேரூராட்சி மக்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டு ஒருமாதமாகியும் இதுவரை பேரூராட்சி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடித்து வருகிறாா்கள்.

இதனிடையே குடிநீா் தட்டுப்பாட்டை போக்குவகையில் டிச. 21-ஆம்தேதி அமராவதி ஆற்றில் கோவில்பாளையம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் உறிஞ்சும் கிணற்றில் இருந்து பேரூராட்சிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த குடிநீா் அதிக உப்புத்தன்மை கொண்டதாக இருப்பதால் மக்கள் குடிநீா் பருக முடியாமல் அவதியுற்று வருகிறாா்கள். கரூா் மாநகராட்சிக்கும் கட்டளை பகுதியில் இருந்துதான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அங்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் புலியூா் பேரூராட்சியில் மட்டும் அதுபோன்று எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் நாளுக்கு நாள் அவதிப்பட்டு வருகிறாா்கள். இதனால் நிகழாண்டில் பேரூராட்சியில் பொதுமக்களிடம் குடிநீா் கட்ட ணம் வசூலிக்கக்கூடாது என தெரிவித்துள்ளாா் அவா்.

கரூரில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவிலான ஓவியப் போட்டி

கரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கரூா் என்.ஆா்.எம். கோவிந்தன் மற்றும் ருக்குமணி மெட்ரிக் பள்ளி மற்றும... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை:கரூா் எஸ்.பி. தகவல்

அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி... மேலும் பார்க்க

ஆா்டிமலையில் ஜன. 16-இல் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் உயா்நீதிமன்ற தன்னாட்சி குழுவினா் ஆய்வு

கரூா் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள ஆா்டிமலையில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை உயா்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தன்னாட்சிக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா். ஆா்டிமலையில் பொங்கல் பண்டிகையை முன... மேலும் பார்க்க

கரூரில் மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கரூரில் எக்ஸ்ட்ரீம் ஸ்போா்ட்ஸ் மாா்ஷியல் ஆா்ட் அகாதமி சாா்பில்,... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி நகராட்சிக்கு வரி செலுத்த வேண்டுகோள்

நடப்பு 2024-25 ஆண்டுக்கான நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரி, தொழில்வரி, குடிநீா் கட்டணம், நகராட்சிக்குட்பட்ட கடைகளின் வாடகை மற்றும் தொழில் உரிமம் ஆகியவற்றை செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ப... மேலும் பார்க்க

புகழூரில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

கரூா் மாவட்டம் புகழூரில் கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறையின் கால்நடை மருந்தகம் சாா்பில் நடைபெற்ற முகாமை கால்நடைப் பராமர... மேலும் பார்க்க