செய்திகள் :

பெங்களூரு: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி; நடுரோட்டில் சுட்டுக் கொலைசெய்த இளைஞரால் பரபரப்பு!

post image

பெங்களூருவில் வசிப்பவர் பாலமுருகன் (40). தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆவார். அவர் தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார். இவர் மனைவி புபனேஷ்வரி (39). இவர் அரசு வங்கி ஒன்றில் துணை மேலாளராகப் பணியாற்றி வந்தார். பாலமுருகனுக்கு வேலை இல்லாததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பாலமுருகன் தன் மனைவியின் நடத்தைமீது சந்தேகப்பட்டார். இதுவும் அவர்களிடையே அடிக்கடி சண்டை வரக் காரணமாக இருந்தது.

அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு வருடமாக புபனேஷ்வரி தன் கணவரிடமிருந்து பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். புபனேஷ்வரி நேற்று மாலை வேலை முடிந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரது வருகைக்காகக் காத்திருந்த பாலமுருகன், தன் மனைவி அருகில் வந்ததும் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் நான்கு முறை அவரைச் சுட்டார்.

இதில் இரண்டு தோட்டாக்கள் புபனேஷ்வரியின் தலையில் பட்டன. மற்ற இரண்டு தோட்டாக்கள் கை மற்றும் தோள் பகுதியில் பட்டன. புபனேஷ்வரி ரத்த வெள்ளத்தில் சரிந்தவுடன் பாலமுருகன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு நடந்தே சென்று துப்பாக்கியுடன் சரணடைந்தார். துப்பாக்கிச்சூடு சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். இது குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து புபனேஷ்வரியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். பட்டப்பகலில் நடந்த இப்படுகொலைச் சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் புபனேஷ்வரி கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் தன் கணவருக்கு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்தக் கோபத்தில்தான் பாலமுருகன் இத்துப்பாக்கிச்சூட்டை நடத்தி இருக்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புபனேஷ்வரிக்கு வேறு ஒரு கிளைக்கு பணியிட மாறுதல் கிடைத்தது. இதையடுத்து தன் கணவரிடம் சொல்லாமல் ஒயிட்ஃபீல்டு என்ற இடத்தில் இருந்து... ராஜாஜி நகர்ப் பகுதியில் புதிய வீட்டில் புபனேஷ்வரி குடியேறிவிட்டார்.

புபனேஷ்வரியின் நடத்தையில் பாலமுருகன் சந்தேகப்பட்டது இருவரது பிரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் விவாகரத்து நோட்டீஸை பாலமுருகனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புபனேஷ்வரி வசித்து வந்த புதிய வீட்டை, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பாலமுருகன் கண்டுபிடித்தார். உடனே அந்த வீட்டிற்கு அருகில் பாலமுருகன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கிக்கொண்டு தன் மனைவியின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார். இதற்காக, தான் பார்த்து வந்த வேலையைக்கூட ராஜினாமா செய்துவிட்டு மனைவியின் நடமாட்டத்தை பாலமுருகன் கண்காணித்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். புபனேஷ்வரியின் மரணத்தைத் தொடர்ந்து அவரின் பெற்றோருக்கு போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர்.

ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது.சைபர் கொள்ளைஅந்த லிங்கை திறந... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கு DNA பரிசோதனை; கனடாவில் இருந்து திரும்பும் இளம்பெண்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில் பாலக்காடு தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னா... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரௌடி கொலை - அதிகாலையில் வந்த `ஹெல்மெட்' மர்ம நபர்கள் யார்?

சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவன் (23). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாள... மேலும் பார்க்க

தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந... மேலும் பார்க்க

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் - பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்... மேலும் பார்க்க

சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப ... மேலும் பார்க்க