செய்திகள் :

பெண்களின் பாதுகாப்பை அறிய மஃப்டியில் நின்ற பெண் கமிஷனர்; ஒழுங்கீனமாக நடக்க முயன்று சிக்கிய ஆண்கள்

post image

இரவு நேரங்களில் தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது. அதனை தெரிந்து கொள்ள ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் பெண் போலீஸ் கமிஷனர் ஒருவர் மூன்று மணி நேரம் தனியாக நின்று கொண்டிருந்தார்.

மல்காஜ்கிரி நகர போலீஸ் கமிஷனர் வி.சுமதி நள்ளிரவு 12.30 மணியில் இருந்து அதிகாலை 3.30 மணி வரை தனியாக சாதாரண உடையில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அங்கு மற்ற போலீஸாரும் சாதாரண உடையில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.

இரவு நேரங்களில் பயணம் செய்யும் பெண்கள் எந்த மாதிரியான சிக்கல்களைச் சந்திக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள இது போன்ற ஒரு காரியத்தை சுமதி செய்தார்.

சாதாரண உடையில் சுமதி
சாதாரண உடையில் சுமதி

மூன்று மணி நேரம் சுமதி தனியாக நின்றபோது அவரை போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், மது அருந்திய ஆண்கள் அனுகினர். சில மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் கூட அவரை அனுகினர்.

பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபர்களை போலீஸார் ஏற்கனவே அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந்தனர்.

அதோடு பெண் போலீஸ் கமிஷனரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முயன்ற ஆண்களை உடனுக்குடன் சாதாரண உடையில் நின்று கொண்டிருந்த போலீஸார் அழைத்துச்சென்றனர். அவர்கள் மீது உடனே எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் கூட தங்களது வாகனத்தை நிறுத்தி சுமதியிடம் பேசி எதாவது உதவி வேண்டுமா என்று கேட்டுவிட்டு சென்றனர். சுமதி இது போன்று இதற்கு முன்பு ஒரு ரயில் நிலையத்தில் செய்து இருக்கிறார்.

Anand Mahindra: `வரலாற்றை மாற்றிய ஒரு வாக்கு' - ஆனந்த் மஹிந்திரா வியந்த திருப்பத்தூர் தேர்தல் களம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான போட்டி நிலவியது. தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க-வின் மூத்த நிர்வாகி கே.ஆர்... மேலும் பார்க்க

மும்பை: மாமரத்தில் விளைந்த சீதாப்பழம்? வைரலாகும் வீடியோ; ஆராய்ச்சியாளர் சொல்வது என்ன?

மும்பை அருகே மாமரம் ஒன்றில் சீதாப்பழம் விளைந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அருகில் இருக்கும் பிவண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் பாட்டீல். இவர் மளிகைக்கடை வைத்தி... மேலும் பார்க்க

சொல்லியடித்த சுவேந்து; சறுக்கிய மம்தா - மேற்கு வங்கத்தில் பாஜக முந்தியது எப்படி?

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. காலையில் இருந்தே பா.ஜ.கவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து ஒன்றையொன்று முந்திக்கொண்டிருந்தது... மேலும் பார்க்க

`குருவை மிஞ்சிய சிஷ்யன்' - மம்தாவிடம் அரசியல் பயின்று அவரையே வென்று முதல்வராகும் சுவந்து அதிகாரி?

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே கடும் சர்ச்சைக்குறியதாக இருந்தது. வாக்காளர் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மொத்தம் ... மேலும் பார்க்க

மும்பை: பூங்காவில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்; உதவி போலீஸ் கமிஷனர் கைது; என்ன நடந்தது?

மும்பை ஒர்லி பகுதியில் இருக்கும் பூங்காவில் 9 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அங்கு வந்த 56 வயது உதவி போலீஸ் கமிஷனர் பூங்காவில் யாரும் இல்லாததைத் தெரிந்து கொண்டு சிறுமியிடம் சென்றார். அவர் அச்சி... மேலும் பார்க்க

நெதர்லாந்து அரசக் குடும்பத்தை உலுக்கிய 'இரத்தக் களரி' சதி; இளவரசியைக் குறிவைத்த பயங்கரவாதி கைது

நெதர்லாந்து நாட்டின் அரசக் குடும்பத்தையே உலுக்கியுள்ள ஒரு பயங்கரமான கொலைச் சதி, கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த நாட்டின் வருங்கால அரசியான இளவரசி கேத்தல... மேலும் பார்க்க