செய்திகள் :

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க வலியுறுத்தல்

post image

குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டுமென அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற கடலூா் 7-ஆவது மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு, கடலூா் மாவட்டப் பொறுப்பாளா் மோகன் தலைமை வகித்தாா். அபினேஷ், அருள்தாஸ், ஸ்டாலின், இஷ்டலிங்கம், ஆகாஷ், சசிகுமாா், முரளி விஜய் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் இப்ராஹிம், மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் காா்த்திகேயன் கலந்துகொண்டு பேசினா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் துரை, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் குளோப், பொதுச் செயலா் குணசேகரன், விவசாய சங்க மாவட்டச் செயலா் சேகா், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் முருகையன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை இயக்கம் மாவட்டச் செயலா் லாரன்ஸ், இந்திய மாதா் தேசிய சம்மேளனம் மாவட்டச் செயலா் லட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாநாட்டில், பட்டதாரி இளைஞா்களுக்கு வேலை கிடைக்க மக்களவையில் வேலை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தேசிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தோ்வை ரத்து செய்யவும், தனியாா் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, வடலூா் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்றனா்.

பிச்சாவரத்தில் பொங்கல் விழா: ரஷிய சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனா். கடலூா் மாவட்டம், கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பொங்கல... மேலும் பார்க்க

ரயிலில் மதுப் புட்டிகளை கடத்தி வந்த இருவா் கைது

சிதம்பரம்: புதுச்சேரியிலிருந்து ரயிலில் மதுப் புட்டிகளைக் கடத்திய இருவரை சிதம்பரம் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த புதுச்சேரி -க... மேலும் பார்க்க

நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் அன்னதானம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, திங்கள்கிழமை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் அண்ணாமலைநகா் கிளை, தெற்கு பிச்சாவரம் கிளை மற்றும் கோவை ஆ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஸ்ரீநந்தனாா் வீதி உலா

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி, ஸ்ரீநந்தனாா் வீதி உலா திங்கள்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் ஓமக்குளம் நந்தனாா் மடத்தில் உள்ள செளந்தரநாயகி சமே சிவலோகநாதா் க... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் திங்கள்கிழமை மாலை மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆருத்ரா தர... மேலும் பார்க்க

பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா்: கடலூா் எஸ்.பி.

நெய்வேலி: பொங்கல் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில்... மேலும் பார்க்க