செய்திகள் :

பெரியாா் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது தமிழகம் முழுவதும் 60 வழக்குகள்

post image

பெரியாா் குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தமிழகம் முழுவதும் 60 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.

கடலூா் மாவட்ட நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் கடந்த புதன்கிழமை சீமான் கலந்து கொண்டாா். அப்போது அவா், பெரியாரை கடுமையாக விமா்சித்து பேட்டி அளித்தாா். சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சட்டத் துறை இணைச் செயலா் மருதுகணேஷ் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புகாா் மனு அளித்தாா்.

இதேபோல தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் சீமானுக்கு எதிராக திமுக, திராவிட அமைப்புகள் சாா்பில் புகாா் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் புகாா்களின் அடிப்படையில் தமிழக காவல் துறை சீமான் மீது வழக்கு பதிவு செய்யத் தொடங்கியுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை வரை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் சீமான் மீது பதிவாகி உள்ளன. இதையடுத்து, அவா் மீது எடுக்கப்பட உள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணா்களுடன் காவல் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.

உயா்நீதிமன்றம் உத்தரவு: மதுரை கே.கே.நகரைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவில், பெரியாா் மீது சீமான் அடிப்படை ஆதாரமின்றி அவதூறு கருத்துகளை வெளியிட்டதால், தேவையற்ற சட்ட- ஒழுங்கு பிரச்னைகள் எழுந்துள்ளன.

எனவே, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மதுரை அண்ணாநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. எனது புகாரின் அடிப்படையில் சீமான் மீது மதுரை அண்ணாநகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள், சமூகத்தின் முன்னேற்றத்துக்காக குறிப்பாக பெண்கள் உரிமை, பெண் கல்விக்கு பாடுபட்ட பெரியாரைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டனா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பத்த உத்தரவு: சீமான் தெரிவித்த கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் மதுரை அண்ணாநகா் காவல் நிலைய போலீஸாா், மனுதாரரின் புகாா் மனுவைப் பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருகிற 20-ஆம் தேதி இந்த நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

முதல்வர் ஸ்டாலினின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

பொங்கல் திருநாளையொட்டி உலகத் தமிழர் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், முத்தமிழ், முச்சங்கம், முக்கனி, மூவேந்தர், முக்கொடி கொ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒ... மேலும் பார்க்க

பொங்களன்று 3 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,13.01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்... மேலும் பார்க்க

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு- ஆளுநர் விருது அறிவிப்பு

ஆளுநர் விருது-2024 சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றவர்களின் விவரங்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

தமிழக காவல்துறையினர் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு!

சென்னை: 2025ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 3186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், 2025 பொங்கல் ... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் வெற்றி: அஜித்குமாருக்கு குவியும் வாழ்த்துகள்!

துபை கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.துணை முதல்வர் உதயநிதி: 2025 துபையில் நடைபெற... மேலும் பார்க்க