செய்திகள் :

பெரிய மந்து: 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தோடர் பழங்குடியினரின் கூரை வேயும் திருவிழா!

post image

ஊட்டி முத்தநாடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

தோடர்களின் தலைமையிடமான முத்தநாடு மந்துவில் பாரம்பர்ய கோயிலான "முன்போ தேக்சி அம்மன்" கோயில் உள்ளது.

19 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்தக் கோயிலில் கூரை வேயும் விழா நடைபெறும்.

நீலகிரியில் மொத்தமாக 15 மந்துகள் உள்ளன. அதாவது தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் இடத்தை மந்து என்று கூறுவர். இந்த தோடர் மக்கள் கோயிலை புதுப்பிக்க மூங்கில், பிரம்பு மற்றும் ஆவில் வகை புல்லை பயன்படுத்துகின்றனர்.

இந்த விழா பற்றி தோடர் பழங்குடியினரான மீன்ஸ் குட்டாவிடம் பேசினோம்.

``மூங்கில், பிரம்பு, புல் இவை எல்லாம் கிடைப்பதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும். இதற்காக இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை நாங்கள் காட்டுப் பகுதியிலேயே தங்கியிருந்து தேவையானவற்றைச் சேகரிப்போம். கிட்டத்தட்ட இரண்டு லாரிகள் முழுக்க, உள்ளூரில் கிடைக்காத அந்தப் பொருள்களைச் சேகரிப்போம்.

60 முதல் 70 பேர்வரை கேரள எல்லைக்குச் சென்று தேவையானவற்றைக் கொண்டு வந்து முன்போ தேக்சி அம்மனை வழிபட்டு, இரண்டு நாள்கள் விரதம் இருந்து கூரையை வேய்வோம்" என்றார்.

மந்து கோவில் மற்றும் தெய்வ வழிபாடு பற்றி...

``மந்தின் தெய்வம் `முன்போ தேக்சி அம்மன்'

நாங்கள் மகாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் குலதெய்வமும் பஞ்சபாண்டவர்கள்தான். நாங்கள் ஒலி வடிவில் தெய்வ வழிபாடு செய்கிறோம்."

பெரிய மந்து வரலாறு பற்றி...

``ஊட்டியில் மொத்தம் இரண்டு பெரிய மந்து கோயில்கள் உள்ளன.

அதில் எங்கள் தலைமை மந்து முத்துநாடு மந்து தான்.

எப்பநாட்டில் ஒரு மந்து இருக்கிறது. ஆனால் அது 25 அடி தான். தலைமை மந்துதான் 35 அடி. இதுதான் எங்களின் பூர்வீக மந்து.

தோட மக்கள் 15 ஊர்களில் வசிக்கின்றனர். அவர்களின் முதல் பூர்வீக மந்து என்றால் அது முத்தநாடு மந்து தான்.

நாங்கள் எல்லோரும் வருடத்திற்கு ஒருமுறை `மொற்பந்த்' என்ற எங்கள் குலதெய்வ வழிபாட்டைச் செய்வோம். 15 ஊர்களிலும் இருந்து மக்கள் அன்று ஒரு நாள் கூடி அன்போடு விழாவை சிறப்பிப்போம்.

அதேபோல் தான் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை `முன்போ' பண்டிகையையும் 15 ஊர் மக்களும் சேர்ந்து கூரை வேய விரதம் இருந்து பண்டிகையைக் கொண்டாடுவோம்.

எவ்வளவுதான் காலம் மாறினாலும்... பழைமை மாறாமல் எங்கள் கலாசாரத்தை மறவாமல் நாங்கள் எல்லோரும் ஒன்று கூடி விழாவைக் கொண்டாடுகிறோம்" என்றார்.

`பசில வந்த பிள்ளைக.!' - தாயே வண்டி மலைச்சியா, வண்டிமலையான்... நீங்கதான் துணை' | ஆங்காரிகளின் கதை 5

வண்டிமலையான்ஆங்காரிகளின் கதை 05நாட்டார் தெய்வங்கள் யாவும் புராணங்கதைகள் வழியாக திடீரென உருவாகி வழிபடப்படுபவை அல்ல. சமூக மற்றும் சாதிய அதிகாரங்களுக்கு எதிராக சமரிட்டு பலியான மனிதர்களின் ரெத்த சாட்சியங்... மேலும் பார்க்க

`ஒத்த தங்கைய ஈட்டியால கொல்லுறீங்களே...' ஆணவக்கொலை செய்யப்பட்ட பூச்சியம்மனின் கதை |ஆங்காரிகளின் கதை 4

பூச்சியம்மனின் கதைஆங்காரிகளின் கதை 4“ வலுத்திலுத்தும் தங்கையவள் வர மாட்டேனென்றதினால் கழுத்தறுத்து வெட்டினார்கள் காரிகையை அன்னேரம். வெட்டுப்பட்ட அவள்தலைதான் வேகமாக உருண்டைதையா!…” - பூச்சியம்மன் வில்லுப... மேலும் பார்க்க

கேரளா: 'உலகில் மிக உயரமான கண்ணகி சிலை' - ஆற்றுகால் பகவதி கோயிலில் ரூ.3.5 கோடியில் அமைக்கத் திட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் பெண்களின் காவல் தெய்வம் எனப் போற்றப்படுகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் நடக்கும் பொங்காலை வழிபாட்டி... மேலும் பார்க்க

தைப்பூசம்: 'வேலும் மயிலும் பறபறக்க' - மருதமலை முருகன் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் | Photo Album

தைப்பூசம் : பழநி முருகனைப் பற்றிய இந்த அபூர்வ தகவல்கள் நீங்கள் அறிந்ததுண்டா? மேலும் பார்க்க

வடலூர்: வள்ளலார் 155வது ஜோதி தரிசன விழா | Photo Album

வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார்... மேலும் பார்க்க

தைப்பூசம்: முருக பக்தர்களுக்காக இரவு முழுவதும் திறந்திருந்த தேவாலயம்! - வெளிப்பட்ட மதநல்லிணக்கம்

தைபூசத் திருவிழா, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தைப்பூசத் திருவிழா, நாளை பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவிற்காக அறுபடை... மேலும் பார்க்க