செய்திகள் :

'பெற்றொர்' அத்தியாயத்தை கடனாளியாக இல்லாமல் மகிழ்ச்சியாகத் தொடங்க 'பிளான்'! | பணம் வளர்ப்போம்

post image

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும்.

அப்படி இந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை, நாம் பார்க்கப்போகும் டாபிக், 'குழந்தைகளுக்கான நிதி திட்டமிடல்'.

வாழ்க்கையில் ஒரு அழகான அத்தியாயம் 'பெற்றோர்'. இது அழகான அத்தியாயம் என்பதை விட, இது பொறுப்பான அத்தியாயமும் கூட.

A.V செந்தில்
A.V செந்தில்
அந்த அத்தியாயத்தை முன்னரே சரியாக, பக்காவாகத் திட்டமிட்டு, எளிதாகக் கடப்பது எப்படி என்பதை நமக்கு விளக்குகிறார் நிதி ஆலோசகர் முனைவர் A.V செந்தில்.

"வாழ்க்கையில் குழந்தைக்கு ஆகும் முதல் செலவு என்றால், அது 'டெலிவரி' செலவுதான்.

சில அலுவலங்கங்களில் கொடுக்கும் மருத்துவ இன்சூரன்ஸிலேயே 'பேபி டெலிவரி கவரேஜ்' இருக்கிறது. இவர்கள் டெலிவரி செலவைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

ஆனால், அப்படி இல்லாதவர்கள் முதலீட்டைத் தொடங்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில், மருத்துவ செலவுகள் மிக காஸ்ட்லி என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

டெலிவரிக்காக தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால் செலவு எவ்வளவு ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். அதுவும் சி-செக்‌ஷனாக இருந்தால் செலவை யோசித்து பாருங்கள்... தலையே சுற்றிவிடும்.

இந்தச் செலவை நாம் முன்னரே திட்டமிடவில்லை என்றால், கடைசியில் கடன்தான் வாங்க வேண்டியதாக இருக்கும்.

கடனில் இருந்து தப்பிக்க, திருமணம் ஆன உடனேயே ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை டெப்ட் ஃபண்ட், கார்ப்பரேட் ஃபண்ட், ஆர்.டி, பாண்ட் ஆகியவற்றில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வாருங்கள்.

பல்க்கான தொகை இருந்தால் எஃப்.டியில் முதலீடு செய்யுங்கள்.

கர்ப்பம்
கர்ப்பம்

மேலே சொல்லியிருக்கும் முதலீடுகள் அனைத்தும் ரிஸ்க் குறைவான முதலீடுகள். ஏனெனில், குழந்தைப் பெற்றுக்கொள்ள 2 - 3 ஆண்டுகளுக்குள் பிளான் செய்திருப்போம். அதனால், இதில் அதிக ரிஸ்க் எடுக்க முடியாது.

ஆக, திருமணம் ஆன உடனேயே முதலீடு செய்யத் தொடங்கி, பெற்றோர் அத்தியாயத்தை கடனாளியாக இல்லாமல்... மகிழ்ச்சியாகத் தொடங்குங்கள்".

Labham - 3: EMI + SIP... வீட்டுக் கடனை எளிதாகக் கட்டி முடிக்கும் சூப்பர் ஃபார்முலா

35 வயதானாலே போதும், 'சொந்தமா இன்னும் வீடு வாங்கலையா...? கடனைக் கிடனை வாங்கி, மொதல்ல, ஒரு வீடு வாங்குப்பா...' என்று நெருக்குதலைத் தர இன்று பல வீடுகளில் 'பெரியவர்கள்' தயாராக இருக்கிறார்கள். இன்றுள்ள நில... மேலும் பார்க்க

NRI - 10: ரிஸ்க்கே எடுக்க மாட்டேன் என்பவரா நீங்கள்? எத்தனை லட்சங்களை நீங்கள் இழப்பீர்கள் தெரியுமா?

மனிதர்கள் இரண்டு வகை. 'எந்த விஷயத்திலும் நான் ரிஸ்க்கே எடுக்க மாட்டேன்' என்பவர்கள் ஒரு வகை. 8 மணிக்கு ரயில் என்றால், 7.30 மணிக்கே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விடுவார்கள். 40 கிலோ மீட்டருக்கு மேல் வண்டிய... மேலும் பார்க்க

`25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்' புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அனுமதி இலவசம்; பரிசு உண்டு

சம்மர் வந்துவிட்டது. கொளுத்தும் வெயிலில் எல்லோரும் ஏசி, குளிர் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவோம். இதனால் மின்கட்டணமும் எகிறும். ஆனால், இந்த வெயில் காலத்திலும் இலவச மின்சாரம் மூலம் மின் கட்டணத்திலிருந்த... மேலும் பார்க்க

கையில் பணம் புழங்கிக்கொண்டே இருக்க செய்யக் கூடாத தவறுகளின் லிஸ்ட் | பணம் வளர்ப்போம் - 4

என்ன தான் பார்த்து பார்த்து நிதி திட்டமிடல் செய்தாலும், சில நேரங்களில் சில தவறுகளும் நடந்துவிடும். அவை தெரிந்து செய்யும் தவறுகள் அல்ல... தெரியாமல் செய்யும் தவறுகள் தான். அவை என்னென்ன என்பதை பட்டியலிடு... மேலும் பார்க்க

Labham - 2: தங்கம் விலை இந்த 10 ஆண்டில் எத்தனை மடங்கு உயரும்? #அக்‌ஷய திருதியை #Akshaya Tritiya

தங்கம் என்பது நம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நமக்கு மொத்தமாக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கம் வாங்கிக் குவிக்கிறார்கள் நம் மக்கள். இன்னும் சில நாள்களில் அக்ஷய திருதியை ப... மேலும் பார்க்க

NRI Corner 9 - உங்கள் பெற்றோர், குழந்தைகளுக்கு மாதந்தோறும் பணம் தர இந்த ஒரு ஃபண்ட் இருந்தால் போதும்!

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்னை, தமிழ்நாட்டில் இருக்கும் பெற்றோருக்கு மாதந்தோறும் பணம் தரவேண்டும்; அல்லது, கல்லூரியில் படிக்கும் மகள்/மகனுக்குப் பணம் அனுப்ப வேண்டும... மேலும் பார்க்க