செய்திகள் :

'பைத்தியக்காரர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்று தான் ஈரான் போர்!' - ட்ரம்ப் காட்டம்

post image

அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்ததற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று - ஈரான் செய்து வரும் அணு ஆயுதத் தயாரிப்பு.

இப்போது பாகிஸ்தானில் நடந்து வரும் பேச்சுவார்த்தை தள்ளிப்போவதற்கான காரணமும் - இரு தரப்பிற்கும் இந்த விஷயத்தில் இன்னும் உடன்பாடு ஏற்படாதது தான்.

இந்த நேரத்தில் ஈரான் தயாரித்து வரும் அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

"அமெரிக்கா ஈரானை B2 பாம்பர்களை வைத்து தடுத்தது. இதை அமெரிக்கா செய்யவில்லையென்றால், ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்திருக்கும்.

இஸ்ரேல், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் துண்டுகளாக சிதறி இருக்கும்.

ஈரான் போர்
ஈரான் போர்

அமெரிக்கா ஈரானுடன் போர் தொடுத்திருப்பதற்கான காரணமே - 'பைத்தியக்காரர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது' என்பது தான்.

ஈரான் சிதைந்து வருகிறது. அவர்களிடம் கடற்படை, விமானப் படை, ரேடார் எதுவும் இல்லை. அவர்களுடைய தலைவர்களும் இறந்துவிட்டார்கள்.

ஈரான் போர் விரைவில் முடிந்துவிடாது. விரைவில் முடிந்தால், இதே பிரச்னையை இன்னும் மூன்று ஆண்டுகளில் மீண்டும் இந்தப் பிரச்னையை சந்திக்க முடியாது" என்று பேசியுள்ளார்.

"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" - திருமாவளவன் வருத்தம்

நாளை மறுநாள் (மே 4), தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விசிகவினர் தேர்தல் பணிகள் குறித்து ... மேலும் பார்க்க

'தவெக-விடம் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வலிமை இல்லை' - திருமாவளவன் பேச்சு

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசியுள்ளதாவது..... மேலும் பார்க்க

ஈரான் Lock ஆன '5' விஷயங்கள்: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டதன் விளைவு!

ஈரான் - அமெரிக்கா போர் இன்னும் முடிந்தபாடில்லை. அமெரிக்காவிற்கு நெருக்கடி கொடுக்க ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. ஈரானுக்கு நெருக்கடி கொடுக்க, ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து ஈரானின் கப்பல் எத... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில் மீண்டும் இன்று தேர்தல்: 'எங்களுக்கு தான் பெரும்பான்மை' - திரிணாமுல்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகியவை சட்டமன்ற தேர்தல் முடிந்து, ரிசல்டுக்காக காத்திருக்கின்றன. கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 29) தான், மேற்கு வங்கம் இரண்டாம் கட்ட தேர்தலை சந்தித்து ம... மேலும் பார்க்க