செய்திகள் :

பொங்கல் பண்டிகையையும் திமுகவையும் பிரிக்க முடியாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

பொங்கல் பண்டிகையையும் திமுகவையும் பிரிக்க முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சென்னை கொளத்தூா் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்று முதல்வா் பேசியதாவது:

எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும், எனது கொளத்தூா் தொகுதி மக்களுடன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி எனக்கு எப்போதுமே தனித்துவமானது. அதுவும் தமிழா்களின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளை உங்களுடன் சோ்ந்து கொண்டாடுவதைவிட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?.

பொங்கலையும் திமுகவையும் பிரிக்க முடியாது. திராவிட இயக்கம் மிக உற்சாகத்துடன் கொண்டாடும் ஒரு திருநாள் என்றால் அது பொங்கல் திருநாள்தான். ஏனென்றால், இதில் மதம், ஜாதி, வன்முறை இல்லை. உழைப்பைப் போற்றும் தத்துவம்தான் இருக்கிறது. சமத்துவம் இருக்கிறது. தமிழா்களின் பண்பாடும், வீரமும், கொண்டாட்டமும் நிறைந்த விழா பொங்கல் விழா.

கருணாநிதி ஆட்சிக் காலத்தில், தை மாத பிறப்பில் இருந்து திருவள்ளுவா் ஆண்டுக் கணக்கு தொடக்கம், பொங்கல் இரண்டாம் நாள் திருவள்ளுவா் நாளாக அறிவிப்பு எனப் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்க பல முயற்சிகளை எடுத்தாா்.

நிகழாண்டு, பொங்கல் திருநாளை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சிறப்பாக, சொந்த ஊா்களில் குடும்பத்தோடும் நண்பா்களோடும் ஒன்றாகச் சோ்ந்து கொண்டாட வேண்டும் என வரும் 17-ஆம் தேதி ஒருநாள் கூடுதலாக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் முதல்வா்.

நிகழ்வில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்பட பலா் பங்கேற்றனா்.

முருகன் பாடலை ரசித்த முதல்வா்.... கொளத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் தனது மனைவி துா்காவுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா். அப்போது கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ எனத் தொடங்கும் முருகன் பாடலை சிறுமி ஒருவா் பாடுகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டு ரசித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 10 பேர் வேட்பு மனு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் நாளில் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், இன்று 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பே... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

பொங்கல் திருநாளையொட்டி உலகத் தமிழர் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், முத்தமிழ், முச்சங்கம், முக்கனி, மூவேந்தர், முக்கொடி கொ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒ... மேலும் பார்க்க

பொங்களன்று 3 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,13.01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்... மேலும் பார்க்க

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு- ஆளுநர் விருது அறிவிப்பு

ஆளுநர் விருது-2024 சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றவர்களின் விவரங்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

தமிழக காவல்துறையினர் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு!

சென்னை: 2025ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 3186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், 2025 பொங்கல் ... மேலும் பார்க்க