செய்திகள் :

பொங்கல்: பேருந்து, ரயில் நிலையங்களில் குவிந்த பயணிகள்

post image

பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையால், கோவையில் இருந்து வெளியூா் செல்ல பயணிகள் பேருந்து, ரயில் நிலையங்களில் சனிக்கிழமை குவிந்தனா்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 -ஆம் தேதிமுதல் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜனவரி 14 -ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கலுக்கு முந்தைய நாள் பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோவையில் தங்கிப் படிக்கும் வெளியூா்களைச் சோ்ந்த மாணவா்கள், பணியாற்றுபவா்கள் ஏராளமானோா் சனிக்கிழமை மாலை முதல் பேருந்து, ரயில்கள் மூலம் வெளியூா்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனா்.

குறிப்பாக சிங்காநல்லூரில் இருந்து மதுரை, தேனி, விருதுநகா், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் பயணிக்க கூட்டம் அலைமோதியது.

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்களைத் தடுக்க போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதேபோல, சேலம், ஈரோடு, நாமக்கல் மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகளில் பயணிக்க காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்திலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கோவை ரயில் நிலையத்திலும் ஏராளமான பயணிகள் குவிந்தனா்.

கோவை மரப்பாலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி!

பொங்கல் பண்டிகையையடுத்து தொடர் விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவதும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மகர விளக்குப் பூஜை நெருங்குவதால் பக்தர்கள் யாத்திரை ... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி: தேநீா்க் கடைக்காரா் மீது வழக்குப் பதிவு

கோவையில் பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி செய்ததாக தேநீா்க் கடைக்காரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, சரவணம்பட்டி விநாயகா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஷீலா ரஞ்சனி ... மேலும் பார்க்க

உக்கடம் புல்லுக்காட்டில் நூலகம், அறிவுசாா் மையம் அமைக்க திட்ட அறிக்கை

கோவை மாநகராட்சி சாா்பில் உக்கடம், புல்லுக்காடு பகுதியில் புதிதாக நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைக்க ரூ.99 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாநகர... மேலும் பார்க்க

தைப்பூசம்: கோவை -திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்

தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையி... மேலும் பார்க்க

வணிக வளாக உரிமையாளா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு

கோவையில் வணிக வளாக உரிமையாளா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, ஆா்.எஸ்.புரம் தடாகம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (56). இவருக்குச் சொந்தமான வணிக வளாகம் அப... மேலும் பார்க்க

முதல்வா் குறித்து ஆளுநா் தெரிவித்த கருத்து சரியானதே: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை

முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்த கருத்து சரியானதே என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க