செய்திகள் :

பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி; ம.செ ஆகிறார் கதிர் ஆனந்த்!

post image

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று திமுக தலைமைக் கழக பதவி நியமன அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி,

முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் ஆகிய இருவருக்கும் தற்போது திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போது துணைப் பொதுச் செயலாளராக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்து வந்த திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்படுகிறார். திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக கே.ஈஸ்வரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

துரைமுருகன், கதிர் ஆனந்த்
துரைமுருகன், கதிர் ஆனந்த்

அடுத்ததாக, வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு என்று இரண்டு மாவட்டக் கழகங்களாக திமுக பிரித்துள்ளது.

இதையடுத்து வேலூர் தெற்கு (வேலூர் அணைக்கட்டு, குடியாத்தம்) மாவட்ட செயலாளராக ஏ.பி.நந்தக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் வடக்கு (காட்பாடி, கீழ்வைத்தியாணான்குப்பம்) மாவட்ட செயலாலராக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நியமிக்கப்படுகிறார்.

"எடப்பாடி பழனிசாமியால் தான் தி.மு.க-வில் சேர்ந்தார் மனோஜ் பாண்டியன்" - டிடிவி தினகரன் பேச்சு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே சிங்கம்பட்டியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். "மனோஜ் பாண்டியன் எதையும் ஆழ்ந்து யோசித்து செய்யக்கூடியவர். அவர் தி... மேலும் பார்க்க

தொடங்கிய SIR தெளிவில்லாத ECI | BJP அரசுமீது CJI GAVAI குற்றச்சாட்டு| DMK பொன்முடிக்கு மீண்டும் பதவி

* 12 மாநிங்களில் இன்று முதல் SIR பணிகள் தொடக்கம்!* SIR நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல்!* தேர்தல் ஆணையம் நியாயமாக நடப்பதால்தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு... மேலும் பார்க்க

TVK : 'அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு எங்களை ஏன் அழைக்கவில்லை?' - தவெக காட்டம்!

அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதுசம்பந்தமாக மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சி... மேலும் பார்க்க

"பிரம்மயுகம் ஒரு மறக்க முடியாத பயணம்" - நெகிழ்ந்த மம்மூட்டி

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் மம்மூட்டி நடிப்பில் கடந்த 2024, பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் பிரம்மயுகம். இந்த படத்துக்காக மம்மூட்டி, 2025 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட ... மேலும் பார்க்க

TVK : 'கரூர் சம்பவத்துக்கு பிறகு வெளியில் வரும் விஜய்!' - சிறப்புப் பொதுக்குழுவின் திட்டம் என்ன?

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக வெளியில் வந்து நிர்வாகிகள் மத்தியில் பேசவிருக்கிறார் விஜய். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கவிருக்கிற... மேலும் பார்க்க