செய்திகள் :

போர்க்களத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட் வரை.! - உயிரிழந்த ஆப்கான் வீரர் ஷபூர் ஜத்ரானின் பயணம்

post image

போர் பதற்றத்துக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் மத்தியில் வாழும் ஆப்கானிஸ்தானில் இருந்து உலக கிரிக்கெட்டில் அந்த நாட்டின் அடையாளத்தைப் பதித்த சிறந்த வீரர்களில் ஒருவர்தான் ஷபூர் ஜத்ரான்.

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த சில மாதங்களாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்த செய்தி கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஷபூர் ஜத்ரான்
ஷபூர் ஜத்ரான்

1987-ல் ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தில் பிறந்த ஷபூர், போர் காரணமாக அகதிகள் முகாமிலேயே வளர்ந்தார். கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தின் மூலம், 2004-ஆம் ஆண்டு முதன்முதலாக ஆப்கானிஸ்தான் அணிக்காக களமிறங்கினார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சர்வதேச அரங்கில் தனது முதல் அடிகளை எடுத்து வைத்த காலகட்டத்திலேயே அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த இவர், தனது இடதுகை வேகப்பந்து வீச்சாலும், ஆக்ரோஷமான அணுகுமுறையாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 2009 முதல் 2020 வரை ஆப்கானிஸ்தான் அணிக்காக 44 ஒருநாள் மற்றும் 36 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2010 முதல் 2016 வரை நடைபெற்ற நான்கு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர்களிலும் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி, 9 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் தனது இடத்தை உறுதிப்படுத்திய ஆரம்பகட்டப் பயணத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது.

2015 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யப் போராடிக் கொண்டிருந்தது.

ஷபூர் ஜத்ரான்
ஷபூர் ஜத்ரான்

கடைசி விக்கெட்டுக்குக் களமிறங்கிய ஷபூர், அழுத்தமான சூழலில் ஒரு பவுண்டரி அடித்து அணியை வரலாற்று வெற்றி பெற வைத்தார். அன்றிலிருந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களின் நாயகனாக திகழ்ந்தார்.

ஆனால், கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்த இவர், தனது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு, ஜூலை 7-ஆம் தேதி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், "ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் அடித்தளத்தை அமைத்த வீரர்களில் ஒருவராக ஷபூர் ஜத்ரான் என்றும் நினைவுகூரப்படுவார்" என்று புகழாரம் சூட்டியுள்ளது.

Rohit Sharma: 'நான் ஓய்வுபெறுகிறேனா?' - ரோஹித் சர்மா அளித்த விளக்கம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இங்கிலாந்... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியுடன் ரோஹித் ஓய்வு பெறுகிறாரா?- விளக்கம் அளித்த பிசிசிஐ செயலாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியானது.இந்தத் தகவல்கள் அதிர்ச... மேலும் பார்க்க

`இது சரித்திரத் தருணம்!' - லார்ட்ஸில் பேட்டிங், பவுலிங் என சகலத்திலும் மிரட்டிய ஹர்மன்பிரீத் படை!

லண்டனின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சரித்திர வெற்றி படைத்திருக்கிறது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மக... மேலும் பார்க்க

CSK: 18 ஆண்டுகாலப் பயணம்; 5 முறை கோப்பை வென்ற பயிற்சியாளர் - சிஎஸ்கேவில் இருந்து விலகிய ஃப்ளெமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், 200... மேலும் பார்க்க

'டிரான்சிஷன் ஃபேஸில் இருக்கிறோம்!' - தொடர் படுதோல்விக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி படுதோல்வியுடன் இழந்துள்ளது. மூன்றாவது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், அணியின் தொடர் சொதப்பல்களுக்குக் காரணம் என்ன என்பது குறித்த... மேலும் பார்க்க

"கேவலம்... இதைவிட மோசமாக சொல்ல வார்த்தையில்லை!" - படுதோல்வி குறித்து ஷ்ரேயாஸ் காட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இது டி20 வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய தோல்வியாகும். இங்கில... மேலும் பார்க்க