செய்திகள் :

போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நமது எல்லையை காக்கும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு வணக்கம். அமைதி நிலைத்திருக்கட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர்.

இதற்கு கடந்த 7-ஆம் தேதி இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் கடந்த 3 நாள்களாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது.

ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்: ஜெய்சங்கர்

ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் அந்த முயற்சி திறம்பட முறியடிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் போரை நிறுத்த இந்தியா- பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிக்க அதிபர் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்தார்.

அதனை இந்திய தரப்பும் பாகிஸ்தான் தரப்பும் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரிலிருந்து 38 தமிழக மாணவர்கள் தில்லி திரும்பினர்!

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரிலுள்ள பாராமுல்லா பகுதியில் அமைந்துள்ள ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த 38 மாணவர்கள் இன்று(மே 11) புது தில்லி... மேலும் பார்க்க

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.அருள்மிகு குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.19 மணிக்கு பிரவேசம் செய்தார். இதனைமுன்... மேலும் பார்க்க

பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினி பாராட்டு

பாகிஸ்தானிற்குள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுப... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்!

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் வெறிநாய் ஒன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள், நின்று கொண்டிருந்தவர்களை கடித்துவிட்டு சென்றதால் 20க்கு... மேலும் பார்க்க

சீர்காழி அருகே வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம்!

சீர்காழி அருகே வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம் அடைந்தனர்.சீர்காழி அடுத்த மருவத்தூரிலிருந்து மாமல்லபுரம் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் சித்திரை மு... மேலும் பார்க்க