செய்திகள் :

“எங்களுக்கு யாரும் பூஸ்ட் தரத் தேவையில்லை” - விஜய்யின் தந்தை அழைப்புக்கு செல்வப்பெருந்தகை பதில்

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருப்பதாகத் தகவல்களும் வெளியாகி வருகின்றன.

எஸ்.ஏ சந்திரசேகர்
எஸ்.ஏ சந்திரசேகர்

இந்தச் சூழலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது, "விஜய்யின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்கிறார். அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து, கொடுத்து காங்கிரஸ் தேய்ந்து போகிறது. ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் பழைய நிலைமைக்கு காங்கிரஸ் வரும். காங்கிரஸ் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகையிடம் எஸ்.ஏ சந்திரசேகர் காங்கிரஸ் தொடர்பாக பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த அவர், " எங்கள் தொண்டர்களுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ் கொடுத்திருக்கிறார். எங்களுக்கு யாரும் பூஸ்ட் தர தேவையில்லை.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

இருந்தாலும் எங்களுக்கு பூஸ்ட் கொடுப்பதாகச் சொன்னதற்கு நன்றி. மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் விரைந்து செயல்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் இது எதிரொலிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

'திமுக மா.செக்கள் திருடர்கள்; மே 10 ஆம் தேதி விஜய் முதல்வர்!' - தவெக

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெகவின் தேர்தல் பிரசாரக்குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்திருந்தது.TVKஅதில் பேசிய செங்கோட்டையன், '234 தொகுதிகளிலும் விஜய்தான் நிற்கிறார். விஜய் அடையாளம் ... மேலும் பார்க்க

DMK: குறைசொல்லும் ஜோடங்கர்; ராகுலுடன் சந்திப்பு நடத்திய கனிமொழி - திமுகவின் தேர்தல் திட்டம் என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது.ஒருபுறம் அதிமுக- பாஜக தலைமையிலான NDA கூட்டணி, கட்சிகளை ஒன்றிணைத்துத் தங்கள் கூட்டணியைப் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றது.மறுபுறம் திமுக கூட்டணி இன்னும... மேலும் பார்க்க

`அஜித் அரசியலுக்கு வந்தாலும் கூட்டம் வரும்' - சரத்குமார்

தூத்துக்குடியில் நடிகரும், பா.ஜ.க நிர்வாகியமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஊழலுக்கு எதிராக விஜய் எந்த கட்சியை சேர்க்கப் போகிறார்? ஊழலுக்கு எதிராகத்தான் போட்டியிடுகிறோம்... மேலும் பார்க்க

சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - ஹெலிகாப்டர், விமான விபத்தில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்

மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் இன்று (ஜன..28) காலை நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி நடக்க இருக்கும் ஜில்லா பரிஷத் தேர்தலுக்குப் ... மேலும் பார்க்க

திருவாரூர்: சிதிலமடைந்த குடிநீர் தொட்டி, அங்கன்வாடி கட்டடம்; அலட்சிய அதிகாரிகள்.. அச்சத்தில் மக்கள்!

திருவாரூர் மாவட்டம், கூடுர் ஊராட்சிக்கு உட்பட்ட முசக்குளம் கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முறையான சாலை வசதி, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்... மேலும் பார்க்க

Ajith Pawar: `அஜித் பவார் மரணம்; உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை வேண்டும்' - மம்தா பானர்ஜி

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற நிலையில், பாராமதி விமான நிலைய ஓடுதளம் ... மேலும் பார்க்க