செய்திகள் :

``3 வீடுகள்; 3 வேட்டி கொள்ளையர்கள்; அடுத்தடுத்த நாளில் கொள்ளை சம்பவங்கள்” - பீதியில் நெல்லை மக்கள்

post image

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருபாநகரைச் சேர்ந்தவர் மனோ ரஞ்சிதம். இவர், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நேரத்தில், மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதே பாணியில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் கல்லூரிப் பேராசிரியர் வீட்டிலும், மற்றொரு வீட்டிலும் புகுந்து மொத்தம் ரூ.92 ஆயிரம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

புகார் அளித்த மக்கள்

இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது தினமும் நள்ளிரவு நேரத்தில் 3 பேர் சாலையில் வேட்டியால் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு, நடந்து சென்று வீடுகளை நோட்டமிடுவதும், பூட்டியுள்ள வீடுகளின் சுவர் ஏறிக் குதித்து கொள்ளையடிப்பதும் பின்பு செளவுகரியமாக நடந்து செல்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளது.  இச்சம்பம் குறித்து அப்பகுதி மக்கள் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து நெல்லை மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளித்தனர். “எங்கள் பகுதியில் 3 வீடுகளில் கொள்ளைச் சம்பவமும், 4 வீடுகளில் கொள்ளை முயற்சியும் நடந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பும் இதே பாணியில் எங்கள் பகுதியில் கொள்ளை நடந்தது. பெரும்பாலும் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக உள்ளனர். வீட்டில் வயதானவர்கள் மட்டுமே பகலில் உள்ளனர்.

புகார் மனு அளித்த மக்கள்

அட்ரஸ் கேட்பது போலவும், குடிக்க தண்ணீர் கேட்பது போலவும் நடித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது நள்ளிரவுகளில் பூட்டிய வீடுகளை உடைத்து கொள்ளையடிக்கும் வேட்டி கொள்ளையர்களின் அட்டகாசத்தால் எங்களுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. போலீஸார் இரவு நேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.” என்றனர் அப்பகுதி மக்கள்.   

சிவகாசி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; முதல்வர் – உதவியாளர் கைது! - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தனியார் தன்னாட்சி கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பி.சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், சக மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்... அவருடன் இணைந்து எடுத்... மேலும் பார்க்க

திருவாரூர்: கீரிப்பிள்ளை கடித்த 7 வயது சிறுவன் - 3 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த சோகம்!

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் புது தெருவைச் சேர்ந்த முத்து-தேவி தம்பதியின் மகன் நவீன்(7) அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். முத்து வீட்டில் நாட்டுக்கோழி வளர்த்து வருகிறார். இந்த நிலையி... மேலும் பார்க்க

சென்னை: வடமாநில இளம்பெண் பாலியல் வன்கொடுமை? - கணவன், குழந்தை என மூன்று பேர் கொல்லப்பட்ட கொடூரம்

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் சாலை ஓரத்தில் கிடந்த சாக்குமூட்டையிலிருந்து ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. அந்த மூட்டையை தெருநாய்களும் சுற்றிக் கொண்டிருந்தன. நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிர... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த காதலி; கொன்று துண்டு துண்டாக வெட்டிய காதலன் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மிங்கி சர்மா(30). இவரைக் கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென காணவில்லை.இந்நிலையில் அங்குள்ள யமுனை ஆற்றுப் பாலத்தில் சாக்க... மேலும் பார்க்க

கரூர்: 4 பவுன் தங்க செயினைப் பறிக்க முயன்ற திருடன்; 20 நிமிடங்கள் போராடிய மூதாட்டி; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி மனைவி எரம்மாள் (வயது: 75). இவர்களுக்கு மகன், மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில், மகன் தி... மேலும் பார்க்க

'தொடர் புகார்; கண்டுக்கொள்ளாத நகராட்சி' மூதாட்டியின் கைவிரலை கடித்து துண்டாக்கிய தெரு நாய்

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக தொடர் புகார் எழுந்தது. இறைச்சி கடைகள் மற்றும் குப்பை கழிவுகள் இரு... மேலும் பார்க்க