செய்திகள் :

'தொடர் புகார்; கண்டுக்கொள்ளாத நகராட்சி' மூதாட்டியின் கைவிரலை கடித்து துண்டாக்கிய தெரு நாய்

post image

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக தொடர் புகார் எழுந்தது. இறைச்சி கடைகள் மற்றும் குப்பை கழிவுகள் இருக்கும் இடங்களில் அதிகம் காணப்படும் தெரு நாய்கள் அவ்வப்போது சாலையில் செல்பவர்களை துரத்தி கடித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று குளித்தலை பாரதி நகரை சேர்ந்த சௌராபானு (65) என்பவர் தனது வீட்டில் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு சந்தை பகுதியில் முட்டைக்கோஸ், காலிபிளவர் கழிவுகளை சேகரிப்பதற்காக சென்று உள்ளார். அப்போது, குளித்தலை உழவர் சந்தை அருகே சாலையில் நடந்து சென்ற போது இரண்டு தெரு நாய் சண்டையிட்டு வந்துள்ளது.

treatment

அதில் ஒரு நாய் அவரது கைவிரலை கவ்வியுள்ளது. இதில், அவரின் வலது கை விரல் துண்டானது. அதோடு, வெறிபிடித்த அந்த நாய் சாலையில் சைக்கிளில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களை துரத்தி, துரத்தி கடித்ததில் ஐந்து பேர் காயம் அடைந்தனர். இதில் காயமடைந்த அனைவரும் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குளித்தலை நகரப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டுமென நகராட்சிக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாய் கடித்ததில் மூதாட்டியின் கைவிரல் துண்டான சம்பவம் குளித்தலை பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் பதுங்கியுள்ள 60 கேங்க்ஸ்டர்களின் உறவினர்கள் மீது நடவடிக்கை - கோல்டி பிரர் பெற்றோர் கைது

பஞ்சாப் மாநிலம் எப்போதும் ஆயுதம் கலாசாரம் நிறைந்து இருக்கிறது. இது தவிர அங்கு போதைப்பொருளும் எளிதாக விற்பனை செய்யப்படுகிறது. அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருக்கிறது. பஞ்சாப்பை சேர்ந்த கிரிமினல... மேலும் பார்க்க

அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிக்கு பலியாகும் தெருநாய்கள் - 1,100 தெருநாய்கள் கொன்று குவிப்பு!

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகள் பற்றி கவலைப்படுவது கிடையாது என்பதே பெரும... மேலும் பார்க்க

திருமணம் செய்வதாக கூறி 10 ஆண்டுகளாக வேலைக்கார பெண்ணுடன் பாலியல் உறவு - இந்தி நடிகர் நதீம் கான் கைது!

பாலிவுட் நடிகர் நதீம் கான் மீது அவரின் வீட்டு வேலைக்கார பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். 40 வயதான அப்பெண் பல பாலிவுட் நடிகர்கள் வீடுகளில் வேலை செய்து இருக்கிறார். சமீபத்தில் வெளியாகி மெகா... மேலும் பார்க்க

`ரெளடி வெள்ளைக்காளி மீது வெடிகுண்டு வீசிய ரௌடி என்கவுண்டர்' - பெரம்பலூர் பரபரப்பு

கடந்த 24-ம் தேதி ரௌடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் உணவு சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது... மேலும் பார்க்க

கேரளா: ஒரு வயது குழந்தை அடித்துக் கொலை; நாடகமாடிய தந்தை சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிஜில். மைக் செட் ஆப்பரேட்டர் வேலை செய்து வந்தார். இவருக்கும் கிருஷ்ணபிரியா என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி ... மேலும் பார்க்க

சிவகாசி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் - என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தனியார் தன்னாட்சி கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பி.சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், சக மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்... அவருடன் இணைந்து எடுத்... மேலும் பார்க்க