செய்திகள் :

திருவாரூர்: கீரிப்பிள்ளை கடித்த 7 வயது சிறுவன் - 3 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த சோகம்!

post image

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் புது தெருவைச் சேர்ந்த முத்து-தேவி தம்பதியின் மகன் நவீன்(7) அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். முத்து வீட்டில் நாட்டுக்கோழி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வீட்டில் தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்துள்ளார் நவீன். வீட்டில் கொடாப்பில் அடைத்திருந்த கோழியை பிடிப்பதற்கு கீரிப்பிள்ளை வந்துள்ளது. அப்போது வீட்டிற்குள் நுழைந்த கீரிப்பிள்ளை தூங்கி கொண்டிருந்த நவீன் கையை கடித்து விட்டது. வலி தாங்காமல் அலறிய நவீனை அப்பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டுள்ளனர்.

கீரிப்பிள்ளை கடித்த சிறுவன்

அதன் பிறகு வேறு எந்த சிகிச்சையும் நவீனுக்கு பெற்றோர் கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நவீனுக்கு காய்ச்சல் அதிகமாக அடிக்க பெற்றோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு நவீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு காய்ச்சல் கடுமையாக அதிகரித்த நிலையில், நவீன் உயிரிழந்து விட்டார். மகன் இறப்பை தாங்க முடியாமல் பெற்றோர் கதறியுள்ளனர்.

இது குறித்து சிலரிடம் பேசினோம், ``கீரிப்பிள்ளை கடித்த நவீனை பெற்றோர் முறையாக சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். கீரிப்பிள்ளை கடித்த பாதிப்பு நவீன் உடம்புக்குள் அதிகரித்து கொண்டே இருந்துள்ளது. நேற்று கீரிபிள்ளை என்ன செய்யுமோ அது போல் செய்ததாக சொல்கிறார்கள். காய்ச்சலும் அதிகமாக அடித்து இறந்து விட்டார். நவீன் உடலை உடனடியாக மருத்துவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்க வில்லை. சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது" என்றனர். கீரிப்பிள்ளை கடித்த சிறுவன் மூன்று மாதம் கழித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; முதல்வர் – உதவியாளர் கைது! - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தனியார் தன்னாட்சி கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பி.சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், சக மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்... அவருடன் இணைந்து எடுத்... மேலும் பார்க்க

சென்னை: வடமாநில இளம்பெண் பாலியல் வன்கொடுமை? - கணவன், குழந்தை என மூன்று பேர் கொல்லப்பட்ட கொடூரம்

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் சாலை ஓரத்தில் கிடந்த சாக்குமூட்டையிலிருந்து ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. அந்த மூட்டையை தெருநாய்களும் சுற்றிக் கொண்டிருந்தன. நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிர... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த காதலி; கொன்று துண்டு துண்டாக வெட்டிய காதலன் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மிங்கி சர்மா(30). இவரைக் கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென காணவில்லை.இந்நிலையில் அங்குள்ள யமுனை ஆற்றுப் பாலத்தில் சாக்க... மேலும் பார்க்க

கரூர்: 4 பவுன் தங்க செயினைப் பறிக்க முயன்ற திருடன்; 20 நிமிடங்கள் போராடிய மூதாட்டி; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி மனைவி எரம்மாள் (வயது: 75). இவர்களுக்கு மகன், மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில், மகன் தி... மேலும் பார்க்க

'தொடர் புகார்; கண்டுக்கொள்ளாத நகராட்சி' மூதாட்டியின் கைவிரலை கடித்து துண்டாக்கிய தெரு நாய்

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக தொடர் புகார் எழுந்தது. இறைச்சி கடைகள் மற்றும் குப்பை கழிவுகள் இரு... மேலும் பார்க்க

வெளிநாட்டில் பதுங்கியுள்ள 60 கேங்க்ஸ்டர்களின் உறவினர்கள் மீது நடவடிக்கை - கோல்டி பிரர் பெற்றோர் கைது

பஞ்சாப் மாநிலம் எப்போதும் ஆயுதம் கலாசாரம் நிறைந்து இருக்கிறது. இது தவிர அங்கு போதைப்பொருளும் எளிதாக விற்பனை செய்யப்படுகிறது. அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருக்கிறது. பஞ்சாப்பை சேர்ந்த கிரிமினல... மேலும் பார்க்க