செய்திகள் :

சிவகாசி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; முதல்வர் – உதவியாளர் கைது! - நடந்தது என்ன?

post image

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தனியார் தன்னாட்சி கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பி.சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், சக மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்... அவருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று  கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில் பரவியதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட முதல்வர் அசோக்- உதவியாளர் மணிமாறன்

இதனையடுத்து, கல்லூரி முதல்வர் அசோக், அம்மாணவி மற்றும் அவரின் தாயாரை அழைத்து  எச்சரித்ததுடன், மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிவிட்டு எச்சரிக்கை செய்ததுடன், படிப்பை தொடருமாறு அறிவுறுத்தினாராம். இந்த நிலையில், மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் மிரட்டியதால்தான் அம்மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக்கூறி, எஸ்.எப்.ஐ மாணவர் சங்கத்தினர், அவரின் இறப்பிற்கு நீதி கேட்டும், உரிய இழப்பீடு கேட்டும் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அளித்துள்ளது.  

அதே நேரத்தில், தற்போது வைரலான புகைப்படம், ஓர் ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது எனவும், அந்த படம் தற்போது எப்படி வைரல் ஆனது எனவும் சக மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கல்லூரி முதல்வர் அசோக்கின், உதவியாளர் மணிமாறன்தான் அந்த புகைப்படத்தை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதாகவும், அந்த மாணவியை பழி வாங்கும் விதமாகச் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கல்லூரி முதல்வர் அசோக் மற்றும் உதவியாளர் மணிமாறன் மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாணவியின் தாயார் மற்றும் மாணவர்கள் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், உயர் கல்வித்துறையின் மதுரை மண்டல இயக்குநர் கலைச்செல்வி கல்லூரியில் விசாரணை நடத்தியதையடுத்து முதல்வரின் உதவியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.  

மாணவர்களின் போராட்டம்

சிவகாசி நகர் காவல் நிலைய போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு முதல்வர் அசோக் மற்றும் மணிமாறன் ஆகியோர் மீது 108 பி.என்.எஸ் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதல்வரைக் கைதுசெய்தனர். சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் சுனில்ராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் முதல்வர் அசோக் ஜாமீனில் வெளியே வந்தார். தலைமறைவாக இருந்த முதல்வரின் உதவியாளர் மணிமாறனை போலீஸார் தேடி வந்த நிலையில், தற்போது அவரும் கைது செய்யப்பட்டார்.  

``3 வீடுகள்; 3 வேட்டி கொள்ளையர்கள்; அடுத்தடுத்த நாளில் கொள்ளை சம்பவங்கள்” - பீதியில் நெல்லை மக்கள்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருபாநகரைச் சேர்ந்தவர் மனோ ரஞ்சிதம். இவர், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நேரத்தில், மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் பணத்தை திரு... மேலும் பார்க்க

திருவாரூர்: கீரிப்பிள்ளை கடித்த 7 வயது சிறுவன் - 3 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த சோகம்!

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் புது தெருவைச் சேர்ந்த முத்து-தேவி தம்பதியின் மகன் நவீன்(7) அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். முத்து வீட்டில் நாட்டுக்கோழி வளர்த்து வருகிறார். இந்த நிலையி... மேலும் பார்க்க

சென்னை: வடமாநில இளம்பெண் பாலியல் வன்கொடுமை? - கணவன், குழந்தை என மூன்று பேர் கொல்லப்பட்ட கொடூரம்

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் சாலை ஓரத்தில் கிடந்த சாக்குமூட்டையிலிருந்து ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. அந்த மூட்டையை தெருநாய்களும் சுற்றிக் கொண்டிருந்தன. நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிர... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த காதலி; கொன்று துண்டு துண்டாக வெட்டிய காதலன் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மிங்கி சர்மா(30). இவரைக் கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென காணவில்லை.இந்நிலையில் அங்குள்ள யமுனை ஆற்றுப் பாலத்தில் சாக்க... மேலும் பார்க்க

கரூர்: 4 பவுன் தங்க செயினைப் பறிக்க முயன்ற திருடன்; 20 நிமிடங்கள் போராடிய மூதாட்டி; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி மனைவி எரம்மாள் (வயது: 75). இவர்களுக்கு மகன், மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில், மகன் தி... மேலும் பார்க்க

'தொடர் புகார்; கண்டுக்கொள்ளாத நகராட்சி' மூதாட்டியின் கைவிரலை கடித்து துண்டாக்கிய தெரு நாய்

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக தொடர் புகார் எழுந்தது. இறைச்சி கடைகள் மற்றும் குப்பை கழிவுகள் இரு... மேலும் பார்க்க