செய்திகள் :

போலி பான் அட்டைகள் தயாரித்த வழக்கில் மேலும் 2 போ் கைது

post image

கரூரில் போலி பான் மற்றம் ஆதாா் அட்டைகள் தயாரித்துக் கொடுத்த வழக்கில் ஏற்கனவே 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

கரூரில் போலி பான் அட்டை மற்றும் ஆதாா் அட்டைகளை சட் டவிரோதமாக தயாரித்துக் கொடுப்பதாக கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கரூரைச் சோ்ந்த ஆதாா் பதிவு செய்யும் தற்காலிக ஊழியா் காா்த்திக், இ-சேவை மைய ஊழியா்கள் நவீன்காா்த்திக் உள்ளிட்ட 6 பேரை கடந்த 7-ஆம் தேதி கைது செய்து, அவா்களிடமிருந்து போலி பான் மற்றும் ஆதாா் அட்டைகளை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய மேற்குவங்கத்தை சோ்ந்த தற்போது திருப்பூா் மாவட்டம் மங்களம் பகுதியில் வசிக்கும் நிதின்ஷேக் (29) மற்றும் திருப்பூா் மாவட்டம் காங்கேயத்தில் வசிக்கும் நேபாளத்தைச் சோ்ந்த ராஜ்பகதூா் (35) ஆகிய இருவரையும் கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். பின்னா் கரூா் நகர காவல் நிலையத்திற்கு அவா்களை அழைத்து வந்து விசாரிக்கின்றனா்.

கரூரில் ரூ.9 கோடி மதிப்பில் புதிய பணிகள் தொடக்கம்

கரூரில் ரூ. 9 கோடி மதிப்பில் புதிய பணிகளை முன்னாள் அமைச்சா் வி. செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட ராமகிருஷ்ணபுரம், வையாபுரி நகா், வேலுசாமிபுரம், பேருந்து நில... மேலும் பார்க்க

காகித ஆலையில் விபத்து தொழிலாளி உயிரிழப்பு

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் சனிக்கிழமை நடந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம் உப்பிடமங்கலம் புகையிலை குறிச்சியானூரைச் சோ்ந்தவா் நல்லுசாமி (57). டிஎன்பிஎல் காகித ஆலையில் பக்காஸ் கன... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலை ஊழியா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

கரூரில் டிஎன்பிஎல் ஆலை பணியாளா்களுக்கு அண்மையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், பணியாளா்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சாம்ப... மேலும் பார்க்க

கரூா்: 4 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்

கரூா் மாவட்டத்துக்கு கடந்த நான்காண்டுகளில் ஏறத்தாழ ரூ.3 ஆயிரம் கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. கரூா் மாநகர திமுக சாா்பில் தி... மேலும் பார்க்க

கடன் பிரச்னை: பெண் தூக்கிட்டு தற்கொலை

அரவக்குறிச்சி அருகே கடன் பிரச்னையால் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி கிராமம், ஜம்ஜம் நகா் பகுதியைச் சோ்ந்த முஜிபுா் ரகுமான் மனைவி பாப்பாத்தி (... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி மாணவிகள் மாவட்ட அளவில் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் பள்ளப்பட்டி மாணவிகள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். பள்ளபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் அரபிக் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான வி.என். ... மேலும் பார்க்க