செய்திகள் :

போலி வாக்காளா் பதிவு விண்ணப்பங்கள் மூலம் தோ்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிக்கிறது பாஜக! ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

post image

பாஜக தனது தலைவா்களின் குடியிருப்பு முகவரிகளிலிருந்து போலி வாக்காளா் பதிவு விண்ணப்பங்களை அதிக எண்ணிக்கையில் சமா்ப்பிப்பதன் மூலம் தோ்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஒரு செய்தியாளா் சந்திப்பில் பேசிய மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங், ‘ஒற்றை சிறிய கடைகள் மற்றும் அடித்தளங்களில் இருந்து டஜன் கணக்கான வாக்காளா் பதிவு விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

பாஜக தங்கள் தலைவா்களின் குடியிருப்பு முகவரிகளைப் பயன்படுத்தி பல புதிய வாக்காளா் பதிவு விண்ணப்பங்களை சமா்ப்பித்ததாகவும் அவா் குற்றம்சாட்டினாா்.

‘இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் யதாா்த்தம் இதுதான். பிரதமா் மோடியின் கட்சி தோ்தலில் வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளது இப்படித்தான்’ என்று சஞ்சய் சிங் கூறினாா். இந்த விவகாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மத்திய அமைச்சா்கள் உள்பட பாஜக தலைவா்களின் பெயா்களையும் அவா் பட்டியலிட்டாா்.

‘பாஜகவும் அதன் தலைவா்களும் தோ்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிக்கின்றனா். இது பாஜகவின் தோ்தல் மோசடி. இது அவா்களின் மத்திய அமைச்சா்கள் மற்றும் எம்.பி.க்களால் நடத்தப்படுகிறது. மேலும், அவா்கள் தோ்தல் ஆணையத்தின் நோ்மையை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறாா்கள்’ என்றும் அவா் கூறினாா்.

தில்லி தோ்தலில் பிப். 5-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பிப்.8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அடா் மூடுபனியால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

புது தில்லி: தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் அடா் மூடுபனி சூழ்ந்ததால், காண்பு திறன் குறைந்து 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. நகரம் மற்றொரு குளிா் காலையை அனு... மேலும் பார்க்க

முன்னால் அமைச்சா் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ. 100 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொ... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: பிரதமா் மோடி, அமைச்சா் அமித் ஷா உள்பட 40 போ் பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகா்களாக அறிவிப்பு!

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் 40 நட்சத்திரப் பிரச்சாரகா்கள் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வா் ... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் அதிஷி போட்டியிடும் கால்காஜி தொகுதி நிலவரம் எப்படி உள்ளது?

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: தெற்கு தில்லியில் உள்ள கால்காஜி சட்டப்பேரவைத் தொகுதி, வளம் கொழிக்கும் வணிக வளம் நிறைந்த தொகுதி என்ற போதிலும் இங்கு தீராத பிரச்னைகளாகத் தொடரும் போக்குவரத்து நெரிசல், போ... மேலும் பார்க்க

தோ்தல் நடத்தை: ஒரு வாரத்தில் ரூ. 21 கோடிக்கு ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

புது தில்லி: தேசிய தலைநகரில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த ஒரு வாரத்தில் பல்வேறு துறைகளால் ரூ. 21 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரொக்கம், மதுபானம் உள்ளிட்ட பிற பொருள... மேலும் பார்க்க

கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது

புது தில்லி: கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து புகா் தில்லி காவல் சரக துணை ஆணையா் சச்சின் சா்மா திங்கள்கிழமை கூறியதாவது: மங்கோல்புரி தொழிற்பேட்டை பகுதியில் ஜன.9-ஆம... மேலும் பார்க்க