செய்திகள் :

Love Oh Love: "பவிஷூடைய குரல் சில சமயங்களில் தனுஷ் குரல் மாதிரியே இருக்கும்" - கே.எஸ். ரவிக்குமார்

post image

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நாயகனாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. படத்தின் டீசர் வெளியீட்டு விழாவும் நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Love Oh Love - Movie Still
Love Oh Love - Movie Still

இங்கு கே.எஸ். ரவிக்குமார் பேசுகையில், " பாரதிராஜா ஐயாவையும் ஆர்.பி. சௌத்ரி சாரையும் நினைவுல வணங்கிட்டு நான் பேசத் தொடங்குகிறேன்." என்று கூறிப் பேசத் தொடங்கியவர், "தனஞ்செயன் சாரை எனக்கு 25 வருஷமா தெரியும்.

என்னோட முதல் தயாரிப்பான 'தெனாலி' படத்துக்கு அவர்தான் ஆடியோவை முழுமையாக வெளியீடு பண்ணாரு. பல துறைகளில் கலக்குபவர் தனஞ்செயன்.

ஒருமுறை என் வீட்டுக்கு வந்து, நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துல உங்களை ஈசி மெம்பரா போட்டிருக்கோம் என்றார். நானும் முதலில் மறுத்துப் பார்த்தேன், பின்னர் சரி என்று விட்டேன்.

அப்போதுதான், 'நான் ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன், நான் டைரக்டரை அனுப்புறேன். கதையில நீங்க ஹீரோவுக்கு அப்பாவா நடிக்கணும்' என்றார். நானும் சரி, கதை கேட்டுட்டுச் சொல்றேன்னு சொல்லியிருந்தேன்.

இன்னொரு நாள் இந்த படத்தோட இயக்குநர் மகேஷ் வீட்டுக்கு வந்தாரு, ஹால்ல உக்காந்து கதை கேட்கத் தொடங்கினேன். டயலாக் எல்லாம் அனல் பறக்குற மாதிரி சத்தமா சொன்னாரு. வீட்ல வேலை பாத்துட்டு இருந்தவங்க, சமைச்சவங்க எல்லாரும் வந்து எட்டிப் பார்த்தாங்க.

கே.எஸ் ரவிக்குமார்
கே.எஸ் ரவிக்குமார்

மூன்றாவது மாடியில் இருந்து என் மனைவி வந்து, ஏதும் பிரச்சினையான்னு கேட்டாங்க. அந்தளவுக்குப் பயங்கரமா டயலாக் எல்லாம் பேசிக் காமிச்சாரு. மகேஷோட முதல் படம் மாதிரியே இல்லை.

அவர் வேலை செய்த விதமா இருக்கட்டும், மற்றவர்களை வேலை வாங்கின விதமா இருக்கட்டும், எல்லாமே சிறப்பா இருந்தது.

சில நேரங்கள்ல இந்த படத்தோட கதாநாயகன் பவிஷூடைய குரல் தனுஷ் குரல் மாதிரியே இருக்கும். பவிஷ் ரொம்ப ஆர்வத்தோடு நடிக்கிறதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியா இருந்தது." என்றார்.

`உங்களுக்கு வேண்டாம் என்று தோன்றினால்.!' - `கருப்பு' படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து ஆர்யா

தமிழ் - மலையாளம் பைலிங்குவல் திரைப்படமாக, ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கிறது 'அனந்தன் காடு' திரைப்படம். இந்தப் படம் ஜூன் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடைசியாக ஆர்யா நடிப்பில் 'மிஸ்டர் எக்ஸ்... மேலும் பார்க்க

Love Oh Love: "செல்வா சார் வீட்டுல பாசமாதானே இருப்பாரு எதுக்கு பயப்படுறாஙகனு நினைச்சேன்!" - பவிஷ்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நாயகனாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. படத்தி... மேலும் பார்க்க

"முடிவில்லாத ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தேன்; ஆனால் இப்போது..." - நடிகை சமந்தா உருக்கம்

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மா இண்டி பங்காரம்' திரைப்படம் ஜூன் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை ராஜ் ந... மேலும் பார்க்க

`அதே அரவணைப்பு, எளிமை...' - முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி

தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்-யை, பிரபல நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பல திரைப்படங்களில் கதா... மேலும் பார்க்க

சாருகேசி விமர்சனம்: ஒய்.ஜி நாடகத்தைப் படமாக அரங்கேற்றியிருக்கும் சுரேஷ் கிருஷ்ணா! கவனம் பெறுகிறதா?

பிரபலமான கர்னாடிக் சங்கீத வித்வானாக இருக்கும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரன்) தனது மனைவி, மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். தந்தையின் புகழ் தன்னுடைய தனித்துவத்தை மறைப்பதாக எண்ணும் சாருகேசியின் மகன் ... மேலும் பார்க்க

`எங்க வீட்டுல சோலார் செட்அப் இல்ல; பவர் கட் தொடர்பா நான் பேசினது தற்குறித்தனமா?'- மாஸ்டர் மகேந்திரன்

தமிழகம் கடந்த சில தினங்களாகச் சந்தித்து வரும் பவர்கட் பிரச்னை தொடர்பாக நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசிய சில வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளாக, சமூக ஊடகங்களில் பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.... மேலும் பார்க்க