செய்திகள் :

மகாராஷ்டிரா: ஷிண்டே மகனை ஓரங்கட்ட திட்டம்? மும்பையில் காங்கிரஸுடன் பாஜக கூட்டணி வைத்த பின்னணி என்ன?

post image

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த மாதம் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் கடுமையான போட்டி இருந்தது.

சிவசேனா(ஷிண்டே)வின் கோட்டையாகக் கருதப்பட்ட அம்பர்நாத்தில் கணிசமாக தமிழர்கள் வசிக்கின்றனர். இங்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க-வும், சிவசேனா(ஷிண்டே)வும் தனித்துப் போட்டியிட்டன.

இது தவிர தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. சிவசேனாவும், பா.ஜ.கவும் இத்தேர்தலில் கடுமையாக மோதிக்கொண்டன.

இத்தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த தேஜஸ்ரீ பாட்டீல் சிவசேனா வேட்பாளர் மனிஷாவைத் தோற்கடித்தார். இது துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

அம்பர்நாத்தை உள்ளடக்கிய கல்யான் மக்களவைத் தொகுதியில்தான் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி.யாக இருக்கிறார். இத்தேர்தலில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் சிவசேனா 27 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 4 இடங்கள் குறைவாக இருந்தன.

எப்படியும் சிவசேனாவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதற்காக பா.ஜ.க தனது மற்றொரு கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

பா.ஜ.க இத்தேர்தலில் 14 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இது தவிர காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க மிகவும் அபூர்வமாக காங்கிரஸ் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

இதையடுத்து நடந்த நகராட்சியின் இதர கமிட்டிகளில் பா.ஜ.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் ஏக்நாத் ஷிண்டே மிகவும் அதிருப்தி அடைந்துள்ளார்.

இது குறித்து பா.ஜ.க தலைவர்களிடம் பேசியபோது இது உள்ளூர் நிர்வாகிகள் எடுத்த முடிவு என்று தெரிவித்தனர்.

இது குறித்து அம்பர்நாத் பா.ஜ.க கவுன்சிலர் அபிஜித் கூறுகையில், சிவசேனாவின் ஊழலில் இருந்து அம்பர்நாத்தை விடுவிப்பதே எங்களது முதல் வேலை என்று தெரிவித்தார்.

`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார்.செல்வப்பெருந்தகை பள்ளி விழா ... மேலும் பார்க்க

கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார்.இவர்கள் இருவரும் ... மேலும் பார்க்க

TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 ... மேலும் பார்க்க

`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில்... மேலும் பார்க்க

அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!

தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அதிருப்தியில் ராமதாஸ்பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் ... மேலும் பார்க்க