செய்திகள் :

மகாராஷ்டிரா: ஷிண்டே மகனை ஓரங்கட்ட திட்டம்? மும்பையில் காங்கிரஸுடன் பாஜக கூட்டணி வைத்த பின்னணி என்ன?

post image

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த மாதம் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் கடுமையான போட்டி இருந்தது.

சிவசேனா(ஷிண்டே)வின் கோட்டையாகக் கருதப்பட்ட அம்பர்நாத்தில் கணிசமாக தமிழர்கள் வசிக்கின்றனர். இங்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க-வும், சிவசேனா(ஷிண்டே)வும் தனித்துப் போட்டியிட்டன.

இது தவிர தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. சிவசேனாவும், பா.ஜ.கவும் இத்தேர்தலில் கடுமையாக மோதிக்கொண்டன.

இத்தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த தேஜஸ்ரீ பாட்டீல் சிவசேனா வேட்பாளர் மனிஷாவைத் தோற்கடித்தார். இது துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

அம்பர்நாத்தை உள்ளடக்கிய கல்யான் மக்களவைத் தொகுதியில்தான் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி.யாக இருக்கிறார். இத்தேர்தலில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் சிவசேனா 27 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 4 இடங்கள் குறைவாக இருந்தன.

எப்படியும் சிவசேனாவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதற்காக பா.ஜ.க தனது மற்றொரு கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

பா.ஜ.க இத்தேர்தலில் 14 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இது தவிர காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க மிகவும் அபூர்வமாக காங்கிரஸ் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

இதையடுத்து நடந்த நகராட்சியின் இதர கமிட்டிகளில் பா.ஜ.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் ஏக்நாத் ஷிண்டே மிகவும் அதிருப்தி அடைந்துள்ளார்.

இது குறித்து பா.ஜ.க தலைவர்களிடம் பேசியபோது இது உள்ளூர் நிர்வாகிகள் எடுத்த முடிவு என்று தெரிவித்தனர்.

இது குறித்து அம்பர்நாத் பா.ஜ.க கவுன்சிலர் அபிஜித் கூறுகையில், சிவசேனாவின் ஊழலில் இருந்து அம்பர்நாத்தை விடுவிப்பதே எங்களது முதல் வேலை என்று தெரிவித்தார்.

49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை (08-01-2026) தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``அறிவு சங்கமத்தை, அறிவு திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகு... மேலும் பார்க்க

'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வ... மேலும் பார்க்க

`நாளை எடப்பாடியை சந்திக்கிறேன்; எங்கள் கூட்டணியில் எந்த நெருக்கடியும் கிடையாது'- நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாலங்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,"நாளை எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கப் போகிறேன். ஏற்கெனவே, பா.ம.க கூட்டணியில் வந்துள்ள... மேலும் பார்க்க

`வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது' - வேதாந்தா குழும தலைவரின் மகன் மரணம் - யார் இந்த அக்னிவேஷ்?

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் அக்னிவேஷ் அகர்வால் காலமாகியிருக்கிறார். வேதாந்தா குழுமம் இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில... மேலும் பார்க்க

சோதனையின்போது உள்ளே நுழைந்த மம்தா; ஆவணங்களைக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டும் ED - நடந்தது என்ன?

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் நிறுவனமான ‘ஐ-பேக்’ I-PAC கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை இன்று (ஜன. 8) சோதனை நடத்தியிர... மேலும் பார்க்க